<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முல்லைத்தீவு &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:17:19 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>முல்லைத்தீவு &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தூக்கில் தொங்கி பெண் மரணம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/death-of-a-woman-hanging-in-a-ditch/</link>
					<comments>https://tamilnaadi.com/news/death-of-a-woman-hanging-in-a-ditch/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 07:18:22 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[garment]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Suicide]]></category>
		<category><![CDATA[கொல்லவிளாங்குளம்]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர்.]]></category>
		<category><![CDATA[பிரதீபன் புஸ்பராணி]]></category>
		<category><![CDATA[பெண்]]></category>
		<category><![CDATA[பொஸிசார்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<category><![CDATA[மாந்தை கிழக்கு]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10876</guid>

					<description><![CDATA[தூக்கில் தொங்கி பெண் மரணம்! தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் பிரதீபன் புஸ்பராணி எனும் இரண்டு பிள்ளைகளின் தாயாரே (வயது-32) உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். முடிவுகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தூக்கில் தொங்கி பெண் மரணம்!</h4>
<p>தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p>
<p>முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் பிரதீபன் புஸ்பராணி எனும் இரண்டு பிள்ளைகளின் தாயாரே (வயது-32) உயிரிழந்துள்ளார்.</p>
<p>இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.</p>
<p>பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். முடிவுகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/death-of-a-woman-hanging-in-a-ditch/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வடக்கில் 15 நாள்களில் 6,667 தொற்றாளர்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/6667-epidemics-in-15-days-in-the-north/</link>
					<comments>https://tamilnaadi.com/news/6667-epidemics-in-15-days-in-the-north/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 06:06:12 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[north]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[இறப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தொற்றாளர்கள்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வடமாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9848</guid>

					<description><![CDATA[வடக்கில்  செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கில்  செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் மன்னாரில் 10 தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>வவுனியா மாவட்டத்தில் 4 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவர் என கொவிட் தொற்றால் பலியாகியுள்ளனர் .</p>
<p>கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை வட மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 634 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 356 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/6667-epidemics-in-15-days-in-the-north/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசியல் கைதி 12 ஆண்டுகளின் பின் விடுதலை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/political-prisoner-released-after-12-years/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/political-prisoner-released-after-12-years/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 01:06:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[release]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[அரசியல் கைதி]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9768</guid>

					<description><![CDATA[இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின் மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த நடராசா குகநாதன் என்பவரே கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 12 வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி இவரின் விடுதலைக்காக பல தரப்பினருக்கும் 100 க்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின் மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த நடராசா குகநாதன் என்பவரே கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>12 வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இவரது மனைவி இவரின் விடுதலைக்காக பல தரப்பினருக்கும் 100 க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/political-prisoner-released-after-12-years/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>புதுக்குடியிருப்பில்  5 பேருக்கு டெல்டா!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/5-delta-in-puthukudiyirupu/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/5-delta-in-puthukudiyirupu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 13:31:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[delta]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[north]]></category>
		<category><![CDATA[puthukudiyiruppu]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[டெல்டா]]></category>
		<category><![CDATA[புதுக்குடியிருப்பு]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8576</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் 5 பேர் இனம்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி வடக்கு மாகாணத்தில் 113 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குறித்த மாதிரிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரின் மாதிரிகள் டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளன. குறித்த ஐவரில் பொலிஸார் இருவரும் பிரதேசவாசிகள் மூவரும் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் 5 பேர் இனம்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி வடக்கு மாகாணத்தில் 113 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.</p>
<p>தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குறித்த மாதிரிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரின் மாதிரிகள் டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளன.</p>
<p>குறித்த ஐவரில் பொலிஸார் இருவரும் பிரதேசவாசிகள் மூவரும் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/5-delta-in-puthukudiyirupu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வீதிகளை புனரமைத்துத் தருக! &#8211; முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை!!</title>
		<link>https://tamilnaadi.com/news/rebuild-the-streets/</link>
					<comments>https://tamilnaadi.com/news/rebuild-the-streets/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Sep 2021 19:08:35 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[கிராம மக்கள்]]></category>
		<category><![CDATA[கோட்டைகட்டிய குளம்]]></category>
		<category><![CDATA[துணுக்காய்]]></category>
		<category><![CDATA[தென்னியன் குளம்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வீதி புனரமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7976</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டைகட்டிய குளம் மற்றும் தென்னியன் குளம் ஆகியவை உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். பழம்பெரும் விவசாய கிராமங்களான தென்னியன் குளம், கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலப்பெருமாள் குளம் உள்ளடங்கலாக சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக குறித்த  கிராம மக்கள் வேறு தேவைகளுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கும் செல்லவேண்டியுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டைகட்டிய குளம் மற்றும் தென்னியன் குளம் ஆகியவை உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.</p>
<p>பழம்பெரும் விவசாய கிராமங்களான தென்னியன் குளம், கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலப்பெருமாள் குளம் உள்ளடங்கலாக சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.</p>
<p>இந்த குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக குறித்த  கிராம மக்கள் வேறு தேவைகளுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கும் செல்லவேண்டியுள்ளது.</p>
<p>இந்த நிலையில் குறித்த பிரதேசத்தின் பிரதான வீதியாக காணப்படுகின்ற வீதிகள் இதுவரை உரிய முறையில் புனரமைக்கப்படாமை மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக தாங்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம் என  கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>எனவே தங்கள் கிராமங்களுக்கான பிரதான வீதியை புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/rebuild-the-streets/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உயிலங்குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!!</title>
		<link>https://tamilnaadi.com/news/farmers-demand-rehabilitation-of-uyilankulam/</link>
					<comments>https://tamilnaadi.com/news/farmers-demand-rehabilitation-of-uyilankulam/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Sep 2021 17:53:17 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[farmers]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mullaiththeevu]]></category>
		<category><![CDATA[uyilankulam]]></category>
		<category><![CDATA[உயிலங்குளம்]]></category>
		<category><![CDATA[த.பிரியதர்ஷினி]]></category>
		<category><![CDATA[புனரமைப்பு]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7986</guid>

					<description><![CDATA[உயிலங்குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!! முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள உயிலங்குளத்தை புனரமைப்பதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம் என கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் த.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின் காரணமாக குளத்தின் அணைக்கட்டில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதேச மக்கள் மற்றும் விவசாயிகள் இராணுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் குளத்தின் அணைக்கட்டு பாதுகாக்கப்பட்டது. குறித்த குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்க வேண்டிய தேவை உள்ளது என விவசாயிகளும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உயிலங்குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!!</h4>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">முல்லைத்தீவு</a> துணுக்காய் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள உயிலங்குளத்தை புனரமைப்பதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம் என கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் த.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின் காரணமாக குளத்தின் அணைக்கட்டில் அரிப்பு ஏற்பட்டது.</p>
<p>இதையடுத்து பிரதேச மக்கள் மற்றும் விவசாயிகள் இராணுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் குளத்தின் அணைக்கட்டு பாதுகாக்கப்பட்டது.</p>
<p>குறித்த குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்க வேண்டிய தேவை உள்ளது என விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.</p>
<p>ஆனால் இன்றுவரை குறித்த குளத்தின் அணைக்கட்டு புனரமைக்கபடாத நிலையில் காணப்படுகின்றது.</p>
<p>கடந்த காலங்களிலே பல்வேறு திட்டங்களில் அதன் புனரமைப்புப் பணிகளுக்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறாததால் குளத்தின் அணைக்கட்டு புனரமைக்கப்படவில்லை.</p>
<p>இந்த குளத்தின் அணைக்கட்டை போக்குவரத்துப் பாதையாக பயன்படுத்துவதால் இதனை புனரமைப்பதில் இடர்பாடுகள் காணப்படுகின்றன என விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது மேற்படி உயிலங்குளத்தில் 63 பயனாளிகள் 139 ஏக்கர் வயல் காணிகளில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.</p>
<p>ஆரம்பத்தில் குளத்தைப் புனரமைப்பதற்கு 10 மில்லியன் ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிகரித்த அளவில் தேவை காணப்படுகின்றது.</p>
<p>அதேவேளை குறித்த அணைக்கட்டு துணுக்காய் பிரதேசத்துக்கு உட்பட்ட விவசாய கிராமங்களுக்கான பாதையாக காணப்படுகின்ற நிலையில் குளத்தின் அணைக்கட்டின் ஊடாகவே பயணம் மேற்கொள்ளப்படுகிறது.</p>
<p>ஆகவே அணைக்கட்டுக்கு கீழான பகுதியில் வீதி அமைக்கப்படும்போது தான் குளத்தைப் புனரமைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான குறித்த வீதியை புனரமைப்பதற்கு 44 மில்லியன் ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இவ்வாறு இரண்டு திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் இவ் வீதியையும் குளத்தின் அணைக்கட்டையும் புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>எனவே எதிர்வரும் காலங்களில் இக்குளம் புனரமைக்கப்படாதிருந்தால் பெரும் ஆபத்துகளை எதிர்கொள்வதுடன் இதன் கீழான விவசாயமும் பாதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/farmers-demand-rehabilitation-of-uyilankulam/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 15:01:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[செஞ்சோலை சிறுவர் இல்லம்]]></category>
		<category><![CDATA[நினைவுநாள்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=2519</guid>

					<description><![CDATA[செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!! முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த சிறார்களை நினைவுகூரச் சென்ற பெற்றோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதேநாள் இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், செஞ்சோலை வளாகத்துக்குச் சென்ற பிள்ளைகளை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!!</h4>
<p>முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த சிறார்களை நினைவுகூரச் சென்ற பெற்றோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p>
<p>முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதேநாள் இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>உயிரிழந்தவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், செஞ்சோலை வளாகத்துக்குச் சென்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p>
<p>இன்று காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.</p>
<p>பூக்கள், மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி்ச் சென்றுள்ளனர். அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார், இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
