<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சஜித் பிரேமதாச &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:10:39 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>சஜித் பிரேமதாச &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தீர்வு காண்பதில் தாமதம்!  – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!</title>
		<link>https://tamilnaadi.com/news/delay-in-resolving/</link>
					<comments>https://tamilnaadi.com/news/delay-in-resolving/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 04:30:47 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[education]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[university]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி தலைவர்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழகங்கள்]]></category>
		<category><![CDATA[பாடசாலைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10547</guid>

					<description><![CDATA[தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு! .கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருத்தமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கி, மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திறந்து அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும். மேலும் நாட்டில் வறுமையால் வாடும் பிள்ளைகள் பல தசாப்தங்களாக அனுபவித்த இலவச கல்வியை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!</h4>
<p>.கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது.</p>
<p>இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருத்தமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கி, மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திறந்து அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p>
<p>மேலும் நாட்டில் வறுமையால் வாடும் பிள்ளைகள் பல தசாப்தங்களாக அனுபவித்த இலவச கல்வியை இழந்துள்ளமை வேதனைக்குரிய விடயமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/delay-in-resolving/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடக கட்டமைப்பு தேவை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/people-need-a-media-structure-that-reveals-the-truth/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/people-need-a-media-structure-that-reveals-the-truth/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 03:46:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[ஊடகக் கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10459</guid>

					<description><![CDATA[மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடக கட்டமைப்பு தேவை ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்படுகின்ற சிங்கள மொழியிலான “பலவேகய”,தமிழ் மொழியிலான “ஐக்கிய குரல்”பத்திரிகையின் மின்னிதழ் அதனோடிணைந்த ஒன்றித்த இணையதள அங்குரார்பண நிகழ்வில் நேரலையாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் காணப்படுகின்ற சம்பிரதாய ஊடக வழிமுறைகளுக்கு அப்பால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடக கட்டமைப்பு தேவை</h4>
<p>ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.</p>
<p>இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>
<p>மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்படுகின்ற சிங்கள மொழியிலான “பலவேகய”,தமிழ் மொழியிலான “ஐக்கிய குரல்”பத்திரிகையின் மின்னிதழ் அதனோடிணைந்த ஒன்றித்த இணையதள அங்குரார்பண நிகழ்வில் நேரலையாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த நாட்டில் காணப்படுகின்ற சம்பிரதாய ஊடக வழிமுறைகளுக்கு அப்பால் சென்ற மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற, நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாக, பொய்யை உருவாக்காத உண்மையையையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்ட தகவல் பறிமாற்ற வலையமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.</p>
<p>நாட்டில் தற்போது காணப்படுகின்ற சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.</p>
<p>ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்</p>
<p>சில தரப்பினர் பொய்யான தகவல்களைக்கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.</p>
<p>அத்துடன் இந்த ஆரம்பகட்ட முயற்சியுடன் இணைந்ததாக கிராமிய மட்டங்கள்தோறும் சரியான தகவல்களை வழங்கக்கூடிய ஊடகக்கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/people-need-a-media-structure-that-reveals-the-truth/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சஜித்துக்கு உடல் பரிசோதனை &#8211; கோருகிறது அரசு!</title>
		<link>https://tamilnaadi.com/news/physical-examination-for-sajith/</link>
					<comments>https://tamilnaadi.com/news/physical-examination-for-sajith/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Sep 2021 04:48:51 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Jegath Kumara]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[அரசு]]></category>
		<category><![CDATA[உடல் சோதனை]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[ஜெகத் குமார]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8927</guid>

					<description><![CDATA[சஜித்துக்கு உடல் பரிசோதனை &#8211; கோருகிறது அரசு! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மூளை மட்டுமல்ல அவரின் முழு உடலையும் பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தால் செய்ய முடியாவிட்டால், அதை விடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முட்டாள் போல் நடந்து கொள்ளும்போது, அதைப் பார்க்கும் மக்கள் அப்படி நடந்துகொள்வதில்லை . எதிர்க் கட்சியினர் மூளை அற்றவர்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சஜித்துக்கு உடல் பரிசோதனை &#8211; கோருகிறது அரசு!</h4>
<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மூளை மட்டுமல்ல அவரின் முழு உடலையும் பரிசோதிக்க வேண்டும்.</p>
<p>இவ்வாறு ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>அரசாங்கத்தால் செய்ய முடியாவிட்டால், அதை விடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முட்டாள் போல் நடந்து கொள்ளும்போது, அதைப் பார்க்கும் மக்கள் அப்படி நடந்துகொள்வதில்லை . எதிர்க் கட்சியினர் மூளை அற்றவர்கள் போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.</p>
<p>இந்த நாட்டில் உள்ளாடைகள் மட்டுமின்றி ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன. அதைப்பற்றி கதைக்காமல் உள்ளாடை இறக்குமதி தடை தொடர்பில் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.</p>
<p>அரசு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் கவனத்தில் கொண்டு செயற்படுகிறது.</p>
<p>மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p>
<p>நாங்கள் சட்டத்தை வளைக்கவில்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே சட்டம் தான் &#8211; என்றார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/physical-examination-for-sajith/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! &#8211; டிலான் பெரேரா</title>
		<link>https://tamilnaadi.com/news/emergency-law-is-not-meant-to-suppress-people-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/</link>
					<comments>https://tamilnaadi.com/news/emergency-law-is-not-meant-to-suppress-people-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 17:18:23 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[dilan perera]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[sugar]]></category>
		<category><![CDATA[அவசரகாலசட்டம்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[சபை அமர்வு]]></category>
		<category><![CDATA[சீனி]]></category>
		<category><![CDATA[டிலான் பெரேரா]]></category>
		<category><![CDATA[பதுக்கல் குடோன்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7448</guid>

					<description><![CDATA[அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! &#8211; டிலான் பெரேரா நாட்டில் அவரசர கால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகவே பல பதுக்கல் குடோன்களை கைப்பற்ற முடிந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் தெரிக்கையில், மக்களை அடக்குமுறை செய்வதற்காக இந்த சட்டம் அல்ல. எதிர்க்கட்சியினர் கறுப்புச் சந்தையிலுள்ள முதலாளிகளுக்கு விசுவாசமாகவே நடக்கின்றனர். ஆனால் மக்கள் பக்கமாக அரசாங்கம் உள்ளது. அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டால் நிச்சயமாக சீனி விலை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! &#8211; டிலான் பெரேரா</h4>
<p>நாட்டில் அவரசர கால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகவே பல பதுக்கல் குடோன்களை கைப்பற்ற முடிந்துள்ளது.</p>
<p>இவ்வாறு தெரிவித்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் தெரிக்கையில்,</p>
<p>மக்களை அடக்குமுறை செய்வதற்காக இந்த சட்டம் அல்ல. எதிர்க்கட்சியினர் கறுப்புச் சந்தையிலுள்ள முதலாளிகளுக்கு விசுவாசமாகவே நடக்கின்றனர். ஆனால் மக்கள் பக்கமாக அரசாங்கம் உள்ளது.</p>
<p>அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டால் நிச்சயமாக சீனி விலை இன்று 270 ரூபாவாக விற்கப்படும் அபாயம் ஏற்படும்.</p>
<p>ஆசிரியர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி போராட்டம் செய்தபோதும் பொலிஸாரை ஈடுபடுத்தி அதனை கட்டுப்படுத்தவில்லை.</p>
<p>ஆனால் ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டபோது அந் நாட்டுப் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p>
<p>ஜனநாயகம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மறந்துவிட்டார். ஜனநாயகம் அழிக்கப்பட்டதை அவர் தனது வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார் &#8211; என்றார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/emergency-law-is-not-meant-to-suppress-people-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை வருகிறது REGEN-COV</title>
		<link>https://tamilnaadi.com/news/regen-cov-is-coming-to-sri-lanka/</link>
					<comments>https://tamilnaadi.com/news/regen-cov-is-coming-to-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Sep 2021 11:39:52 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[REGEN-COV]]></category>
		<category><![CDATA[Ronaprev]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சித் தலைவர்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=6469</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் REGEN-COV என அழைக்கப்படுகின்ற மருந்தை காலம் கடந்தேனும் இலங்கைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்துள்ளார். இந்த மருந்தின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ருவிற்றர் பதிவில் வலியுறுத்தியிருந்தார். உலகம் முழுவதும் அதிக கேள்வி நிலவுகின்ற இந்த மருந்தை நாட்டுக்கு கொண்டுவருமாறு ஓகஸ்ட் 30 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை கோரியிருந்தார். கொரோனாத் தொற்றின் ஆரம்பத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவில் REGEN-COV என அழைக்கப்படுகின்ற மருந்தை காலம் கடந்தேனும் இலங்கைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த மருந்தின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ருவிற்றர் பதிவில் வலியுறுத்தியிருந்தார்.</p>
<p>உலகம் முழுவதும் அதிக கேள்வி நிலவுகின்ற இந்த மருந்தை நாட்டுக்கு கொண்டுவருமாறு ஓகஸ்ட் 30 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை கோரியிருந்தார்.</p>
<p>கொரோனாத் தொற்றின் ஆரம்பத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துக்கு தௌிவுபடுத்தும்போது, அரசாங்கம் அதனை நகைப்புக்கு உட்படுத்தியது என ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>அதே பாணியில் மருந்து தொடர்பான வேண்டுகோளையும் செவிமடுக்காத அரசாங்கம், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போன்று தற்போது அனுமதி வழங்கியிருந்தாலும், மக்களின் வாழ்க்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>கொரோனாத் தொற்றால் நாட்டில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்பட்டபோது அரசாங்கம் மூடநம்பிக்கையின் பின்னால் சென்று விஞ்ஞானத்தை மறந்ததன் விளைவாக ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டனவென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/regen-cov-is-coming-to-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
