<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கோத்தாபாய ராஜபக்ச &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:47:12 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>கோத்தாபாய ராஜபக்ச &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எமது உரிமையை பறிப்பது மிலேச்சத்தனமானது! – கஜேந்திரன் எம்.பி.</title>
		<link>https://tamilnaadi.com/news/local/seizing-our-rights-is-barbaric/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/seizing-our-rights-is-barbaric/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Sep 2021 03:29:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Memorial]]></category>
		<category><![CDATA[nallur]]></category>
		<category><![CDATA[Selvarasa Gajendran]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Thileepan]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[ஐ.நா.]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[செல்வராசா கஜேந்திரன்]]></category>
		<category><![CDATA[தியாகதீபம் திலீபன்]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற தடை]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11746</guid>

					<description><![CDATA[எமது உரிமையை பறிப்பது மிலேச்சத்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தன்னை கைது செய்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு சுடரேற்ற நான் தயாராகும் போது அங்கு நின்ற பொலிஸார் என்னை தடுத்தனர். நான் அவர்களிடம் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கிறதா என கேட்டேன்? ஆனால் அவர்கள் நீதிமன்ற தடையுத்தரவை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எமது உரிமையை பறிப்பது மிலேச்சத்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>தன்னை கைது செய்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு சுடரேற்ற நான் தயாராகும் போது அங்கு நின்ற பொலிஸார் என்னை தடுத்தனர். நான் அவர்களிடம் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கிறதா என கேட்டேன்?</p>
<p>ஆனால் அவர்கள் நீதிமன்ற தடையுத்தரவை காண்பிக்கவில்லை. உங்கள் உரிமையை பறிக்கும் உங்களது செயலை நாங்கள் ஏற்க முடியாது என நான் பொலிஸாருக்கு தெரிவித்தேன்.</p>
<p>இதனால் நினைவிடத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நினைவிடத்தின் முன்பாக நான் நின்ற இடத்திலேயே சுடரேற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் மிலேச்சத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் அதனை காலால் தட்டி அணைத்தார்கள்.</p>
<p>எங்களுடைய உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நினைவுகூரும் உரிமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.</p>
<p>சட்டம், ஒழுங்கு என்ற போர்வையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி சிங்கள– பெளத்த மேலாண்மையை நிலை நிறுத்தி கொள்கின்றனர். இது தமிழர்களுடைய உணர்வுகளை பறிக்கும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-11748" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/DDD-300x209.jpeg" alt="DDD" width="993" height="692" title="எமது உரிமையை பறிப்பது மிலேச்சத்தனமானது! – கஜேந்திரன் எம்.பி. 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/DDD-300x209.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/DDD.jpeg 714w" sizes="(max-width: 993px) 100vw, 993px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/seizing-our-rights-is-barbaric/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஒப்படைக்கப்பட்டோர் கொல்லப்பட்டனரா? – செல்வம் எம்.பி. கேள்வி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/were-the-captives-killed/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/were-the-captives-killed/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 20:39:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[Selvam Adaikalanathan]]></category>
		<category><![CDATA[Sri lanka missing peoples]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[செல்வம் எம்.பி.]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[நீதித்துறை]]></category>
		<category><![CDATA[மரண சான்றிதழ்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11449</guid>

					<description><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு கொடுக்கிறார் எனில் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்? இவ்வாறு நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபை அமர்வில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி, ஐ.நா. சபை செயலாளரை நியூயோர்க்கில் சந்தித்தபோது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகிறோம் எனக் கூறியுள்ளார். ஆனால் சர்வதேச மனிதாபிமான அடிப்படையில் போர்க் காலங்களில் சரணடைந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு கொடுக்கிறார் எனில் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்?</p>
<p>இவ்வாறு நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபை அமர்வில் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி, ஐ.நா. சபை செயலாளரை நியூயோர்க்கில் சந்தித்தபோது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகிறோம் எனக் கூறியுள்ளார்.</p>
<p>ஆனால் சர்வதேச மனிதாபிமான அடிப்படையில் போர்க் காலங்களில் சரணடைந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்றார்.</p>
<p>மரணமடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டோருக்கே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அப்படி என்றால் கண்கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார்.</p>
<p>அந்த வகையில் கொலை செய்தவர்களுக்கு நீதித்துறை என்ன தண்டனை வழங்கப்போகிறது?<br />
படுகொலை செய்யப்பட்டு மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்ற ஜனாதிபதி படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவாரா? எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/were-the-captives-killed/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்</title>
		<link>https://tamilnaadi.com/news/missing-people-in-the-diaspora-dallas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/missing-people-in-the-diaspora-dallas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 18:42:50 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[dallus Azhagaperuma]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[govenment]]></category>
		<category><![CDATA[missing people]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அமைச்சரவைப் பேச்சாளர்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.]]></category>
		<category><![CDATA[காணாமல் போனவர்கள்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[புலர்பெயர் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11441</guid>

					<description><![CDATA[காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ் இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர். இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய விடயமும் அல்ல. காணாமல் போனதாக கூறப்படும் பலர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்</h4>
<p>இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர்.</p>
<p>இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.</p>
<p>காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய விடயமும் அல்ல. காணாமல் போனதாக கூறப்படும் பலர் புலர்பெயர் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.</p>
<p>தமது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கும் பெற்றோர் கண்ணீர் விடும் காட்சிகளை நாம் காண்கிறோம். எனவே இவர்கள் இலங்கையின் பிரஜைகள். இவர்கள் தொடர்பில் நாம் பொறுப்புடன் செயற்படும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே சிறந்தது.</p>
<p>காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் திட்டவட்டமாக என்னால் கூற முடியாது. இதனைக் கண்டறியவே காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டு புலம்பெயர் இலங்கையர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து இது குறித்து பேச்சு நடத்தி தீர்மானங்களை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது &#8211; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/missing-people-in-the-diaspora-dallas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பொறுப்புக்கூறலில் அரசு இரட்டை வேடம்! – சுமந்திரன்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/government-doubles-in-accountability/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/government-doubles-in-accountability/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 16:56:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[goverment]]></category>
		<category><![CDATA[M.A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அரசு]]></category>
		<category><![CDATA[இரட்டைவேடம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. சபை]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[சுமந்திரன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[மனித உரிமை]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11433</guid>

					<description><![CDATA[அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்க சென்ற ஜனாதிபதி ஐ.நா. சபை பொதுச் செயலாளரை சந்தித்தபோது ஒரு கருத்தை கூறுகின்றார். அதற்கு வெளிவிவகார அமைச்சு வேறு ஒரு காரணிகளை கூறுகிறது. இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளக செயற்பாடுகளில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். மனித உரிமையை பலப்படுத்த இணைந்து செயற்படுவோர் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா.வுடன் இணைந்து கடமையாற்றுவோம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றது.</p>
<p>ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்க சென்ற ஜனாதிபதி ஐ.நா. சபை பொதுச் செயலாளரை சந்தித்தபோது ஒரு கருத்தை கூறுகின்றார். அதற்கு வெளிவிவகார அமைச்சு வேறு ஒரு காரணிகளை கூறுகிறது.</p>
<p>இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>உள்ளக செயற்பாடுகளில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். மனித உரிமையை பலப்படுத்த இணைந்து செயற்படுவோர் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா.வுடன் இணைந்து கடமையாற்றுவோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் பிரச்சினைகளை தீர்க்க நாம் தயார் நிலையில் உள்ளோம். இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.</p>
<p>ஆனால் இதனை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. உள்ளக பிரச்சினையை தீர்க்க வெளியக பொறிமுறை எதற்கு? எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் ஏற்கமாட்டோம் எனக் கூறியுள்ளது.</p>
<p>இக் கருத்துக்களின் அடிப்படையில் அரசு இந்த விடயத்தில் இரட்டை நாடகம் போடுவைத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/government-doubles-in-accountability/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எம்மவர்களை மட்டும்  திருப்பித் தாருங்கள்! – உறவுகள் கண்ணீர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/only-return-us/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/only-return-us/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 13:15:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Antonio Guterres]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[govenment]]></category>
		<category><![CDATA[missing people]]></category>
		<category><![CDATA[srilanla]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[UN General Secretary]]></category>
		<category><![CDATA[அன்டோனியோ குட்டெரெஸ்]]></category>
		<category><![CDATA[இறுதிப் போர்]]></category>
		<category><![CDATA[இழப்பீடு]]></category>
		<category><![CDATA[ஐ.நாவின் செயலாளர்]]></category>
		<category><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[மரணச்சான்றிதழ்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11214</guid>

					<description><![CDATA[ஐ.நாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களும் நட்ட ஈடும் கொடுப்பது தொடர்பில் தெரிவித்த கூற்றை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று 1675 ஆவது நாளாக நீதி கோரி தொடர் கவனவீப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தில், எமக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐ.நாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களும் நட்ட ஈடும் கொடுப்பது தொடர்பில் தெரிவித்த கூற்றை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று 1675 ஆவது நாளாக நீதி கோரி தொடர் கவனவீப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.</p>
<p>இந்த போராட்டத்தில், எமக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.</p>
<p>ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ்டனுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.</p>
<p>இதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழ்களும் நஷ்டஈட்டு தொகைகளும் கொடுப்பது எனவும் உள்ளகப் பிரச்சினைகளை உள்ளகப் பொறிமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது எமக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தருகின்றது. எமது கடைசி நம்பிக்கையாக சர்வதேச நீதி பொறிமுறையே இருப்பதால் இந்த இராஜதந்திர சம்பிரதாயங்களை தாண்டி பாதிக்கப்பட்ட எமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்.</p>
<p>இவ் விடயத்தில் ஐ.நாவின் செயலாளர் உட்பட சர்வதேச பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை மற்றும் நீதிப் பொறிமுறை தொடர்பில் கேள்வி எழுப்பாமை எமக்கு கவலையைத் தருகின்றது.</p>
<p>2009ஆம் ஆண்டு இறுதிப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினரிடம் எமது உறவுகள் சரணடைந்தனர். பாதுகாப்புத் தரப்பினரதும் அரசின் உறுதிமொழிகளையும் நம்பி எம் உறவுகளை ஒப்படைத்தோம். இது எமது கண்கண்ட சாட்சி.</p>
<p>விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தாலோ அல்லது தொடர்பைப் பேணினாலோ எம்மிடம் சரணடையுங்கள். நாம் புனர்வாழ்வளித்து மீண்டும் உங்களிடம் ஒப்படைப்போம் என உறுதியளித்தனர். நாம் உறவுகளை உயிருடனேயே ஒப்படைத்தோம். எனவே அவர்களும் புனர்வாழ்வளித்து ஒப்படைத்திருக்க வேண்டும்.</p>
<p>மாறாக அவர்களுக்கு மரணச்சான்றிதழ்களும் நட்டஈடும் கொடுத்து எம்மவர்களை எம்மிடமிருந்து பறித்தமையானது புத்ததர்மத்துக்கே ஏற்புடையதா?</p>
<p>இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதானது அரிதிலும் அரிது. இந்த நிலையில் உள்ளகப் பொறிமுறையூடாக எவ்வாறு நீதி வழங்கப்படும்?</p>
<p>எமக்கு மரணச் சான்றிதழ்களும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் திருப்பித் தருவோம் எனக் கூறி பொறுப்பேற்ற எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும். அதற்கான நீதியை ஐ.நா. வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/only-return-us/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/prime-minister-of-kuwait-meets-the-president/</link>
					<comments>https://tamilnaadi.com/news/prime-minister-of-kuwait-meets-the-president/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 08:50:13 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[kuwait]]></category>
		<category><![CDATA[new york]]></category>
		<category><![CDATA[Sheikh Sabah Al-Hamad Al-Sabah]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<category><![CDATA[குவைத்]]></category>
		<category><![CDATA[குவைத் பிரதமர்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[சந்திப்பு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபா]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11304</guid>

					<description><![CDATA[குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். இலங்கையர்கள் குவைத்தில் பணியாற்றுவதற்கு மேலும் பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். கொவிட் தொற்று [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு</h4>
<p>ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.</p>
<p>இலங்கையர்கள் குவைத்தில் பணியாற்றுவதற்கு மேலும் பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>கொவிட் தொற்று பரவல் மற்றும் கட்டப்பாடு, நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் போன்றன தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச,  தொற்றுபரவல் நீங்கி சமூக நிலை திரும்பும்போது இரு தரப்புகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்திருந்தார்.</p>
<p>துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் குவைத் அரசால் மேற்கொள்ளக் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் இச் சந்திப்பில்  கலந்துரையாடினர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/prime-minister-of-kuwait-meets-the-president/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 07:31:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[justice]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[missing people]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[parliment]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[இழப்பீடு தொகை]]></category>
		<category><![CDATA[ஐ நா மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[சிறீதரன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதி]]></category>
		<category><![CDATA[நீதி]]></category>
		<category><![CDATA[மரண சான்றிதழ்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11281</guid>

					<description><![CDATA[கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி இழப்பீட்டை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா மனித [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம்</h4>
<p><a href="https://www.mfa.gov.lk/wp-content/uploads/2018/09/OMP-Report-and-Recommendation-Tamil-Version.pdf" target="_blank" rel="noopener">இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்</a> தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்?</p>
<p>இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.</p>
<p>காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி இழப்பீட்டை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலாளரிடம் கூறியுள்ளார்.</p>
<p>இறுதிப்போரின் போது ஓமந்தையில் வைத்து தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதா?</p>
<p>அவ்வாறெனின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனரா? ஒப்படைக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என உறுதியளித்தவர்கள் தற்போது இழப்பீட்டு தொகையை பரிந்துரை செய்கின்றனர்.</p>
<p>ஒப்படைக்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என அவர்களது உறவுகள் காத்திருக்கிறார்கள்.</p>
<p>உள்ளகப் பிரச்சினை தொடர்பில் ஆராய உள்ளக விசாரணைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும் எனவும் அரசு கூறுகிறது. கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா?</p>
<p>உள்ளக விசாரணையை நாம் ஏற்கமாட்டோம். நாங்கள் சுயாதீனமான தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய நேர்த்தியான சர்வதேச விசாரணையையே கேட்கிறோம்.</p>
<p>கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலை சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து அவர்களை சுட்டுக் கொள்வேன் என தனது சப்பாத்துக்களை நக்க சொல்லியுள்ளார். அத்துடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.</p>
<p>சாதாரண ஒருவரிடத்தில், துப்பாக்கி அல்லது வெடிபொருள்கள் இருந்து கைப்பற்றப்பட்டால் அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், லொஹானின் விவகாரத்தில் அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை.</p>
<p>அவரிடமிருக்கும் சகல அதிகாரங்களை பறித்து, அவரை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால் அவ்வாறு நீதி வழங்கப்படவில்லை. இந்த கொலை அச்சுறுத்தல் சம்பவமானது தற்போதைய அரசின் ஏதேச்சதிகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>இலங்கை வரலாற்றில் சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் அனுசரணையில் ஏராளமான படுகொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடூரமான சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன.</p>
<p>எனவே உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இது தொடர்பில் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் &#8211; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! &#8211; கோத்தாபய  உறுதி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/amnesty-for-tamil-prisoners-soon/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/amnesty-for-tamil-prisoners-soon/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 10:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Antonio Guterres]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[new york]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[UN General Secretary]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<category><![CDATA[அன்டனியோ குட்டரெஸ்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பொதுச் செயலாளர்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தமிழ் கைதிகள்]]></category>
		<category><![CDATA[நியூயோர்க்]]></category>
		<category><![CDATA[பொதுமன்னிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10899</guid>

					<description><![CDATA[தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! &#8211; கோத்தாபய உறுதி நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன். பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பலரை நான் ஆட்சிக்கு வந்ததன் பின் விடுவித்துள்ளேன். அதன்படி ஏனையோர் தொடர்பான வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. சட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் நீண்டகாலம் தடுப்பில் உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! &#8211; கோத்தாபய உறுதி</h4>
<p>நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன்.</p>
<p>பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பலரை நான் ஆட்சிக்கு வந்ததன் பின் விடுவித்துள்ளேன்.</p>
<p>அதன்படி ஏனையோர் தொடர்பான வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. சட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் நீண்டகாலம் தடுப்பில் உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.</p>
<p>இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸிடம் உறுதியளித்துள்ளார்.</p>
<p>ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் வெகுவிரைவில் முன்னெடுக்கப்படுகின்றன.</p>
<p>மரண சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>தொற்றுப் பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதுவரை இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.  நவம்பர் இறுதிக்குள், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அன்டோனியோ குட்ரஸிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-10724" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/242061522_397219875348259_6759022049578807154_n-300x200.jpg" alt="242061522 397219875348259 6759022049578807154 n" width="965" height="643" title="தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! - கோத்தாபய உறுதி 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/242061522_397219875348259_6759022049578807154_n-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/242061522_397219875348259_6759022049578807154_n-1024x682.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/242061522_397219875348259_6759022049578807154_n-768x512.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/242061522_397219875348259_6759022049578807154_n-scaled.jpg 1080w" sizes="(max-width: 965px) 100vw, 965px" /></p>
<p>இதேவேளை, இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அன்டனியோ குட்டரெஸ் , ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்‌சவிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு, பொதுச் செயலாளர், தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.</p>
<p>இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு என்றும் அதன்படி மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லை என்பதை உறுதிப்படத் தெரிவிக்கிறேன் எனவும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸிடம் எடுத்துரைத்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/amnesty-for-tamil-prisoners-soon/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி – ஐ.நா. பொதுச் செயலாளர் சந்திப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/president-un-meeting-with-the-general-secretary/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/president-un-meeting-with-the-general-secretary/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 10:22:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[76ஆவது கூட்டம்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[Antonio Guterres]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[meet]]></category>
		<category><![CDATA[new york]]></category>
		<category><![CDATA[newyork]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[அன்டோனியோ குத்தேர்ஸ்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐ.நா. சபை]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[சந்திப்பு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[பொது செயலாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10683</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி – ஐ.நா. பொதுச் செயலாளர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேர்ஸ் ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டம், நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பயணத்தின் ஜனாதிபதி நாட்டின் கல்வி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஜனாதிபதி – ஐ.நா. பொதுச் செயலாளர் சந்திப்பு</h4>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.</p>
<p>இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார்.</p>
<p>இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேர்ஸ் ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டம், நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>இந்தப் பயணத்தின் ஜனாதிபதி நாட்டின் கல்வி விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் பல நாடுகளின் அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-10685" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ame-2-300x200.jpg" alt="ame 2" width="995" height="663" title="ஜனாதிபதி – ஐ.நா. பொதுச் செயலாளர் சந்திப்பு 6" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ame-2-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ame-2.jpg 600w" sizes="(max-width: 995px) 100vw, 995px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/president-un-meeting-with-the-general-secretary/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்கா புறப்பட்டார் கோத்தாபய!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/gotabhaya-leaves-for-america/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/gotabhaya-leaves-for-america/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 09:24:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[new york]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[United Nations General Assembly]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10099</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று அதிகாலை நியூயோர்க் புறப்பட்டுள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி உரையாற்றவுள்ளார். நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றகர நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். மேலும் கொரோனாத் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று அதிகாலை நியூயோர்க் புறப்பட்டுள்ளார்.</p>
<p>இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>இக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.</p>
<p>நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றகர நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.</p>
<p>மேலும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை தொற்றிலிருந்து மீட்டெடுப்பது மற்றும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.</p>
<p>அத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/gotabhaya-leaves-for-america/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
