<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொலை &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 16:37:22 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>கொலை &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை !</title>
		<link>https://tamilnaadi.com/news/world/college-student-killed-at-train-station/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/college-student-killed-at-train-station/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 19:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[collage]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[railway station]]></category>
		<category><![CDATA[tambaram]]></category>
		<category><![CDATA[Tamilnaadu]]></category>
		<category><![CDATA[அரசு மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[இளைஞர்]]></category>
		<category><![CDATA[குரோம்பேட்டை]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[சுவாதி]]></category>
		<category><![CDATA[தாம்பரம்]]></category>
		<category><![CDATA[ராதாநகர்]]></category>
		<category><![CDATA[ராம்குமார்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11597</guid>

					<description><![CDATA[சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் . தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்துவரும் இவர் ரயில் நிலையத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த வேளையில் இளைஞர் ஒருவர் இவரை கத்தியால் குத்திவிட்டு பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் .</p>
<p>தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்துவரும் இவர் ரயில் நிலையத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த வேளையில் இளைஞர் ஒருவர் இவரை கத்தியால் குத்திவிட்டு பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.</p>
<p>படுகாயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இளைஞருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.</p>
<p>இந்நிலையில் காதல் விவகாரமாக இருக்கலாமோ எனும் கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .</p>
<p>கடந்த 2016ஆம் ஆண்டு மென்பொருள் துறையில் பணியாற்றிய சுவாதி எனும் இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டது.</p>
<p>அதில் குற்றவாளியான ராம்குமார் என்பவர் கைதாகி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் .</p>
<p>இந்நிலையில் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/college-student-killed-at-train-station/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திருவலையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! &#8211; அரியாலையில் சம்பவம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-wife-who-beat-her-husband-to-death-by-tiruvalai/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-wife-who-beat-her-husband-to-death-by-tiruvalai/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Sep 2021 08:20:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ariyalai]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[அரியாலை]]></category>
		<category><![CDATA[கணவன்– மனைவி]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[திருவலைக் கட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10414</guid>

					<description><![CDATA[கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார். மேசன் தொழிலில் ஈடுபடும் இவர் மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவருகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அதிகாலை வழங்கப்பட்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.</p>
<p>சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.</p>
<p>மேசன் தொழிலில் ஈடுபடும் இவர் மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவருகின்றது.</p>
<p>யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அதிகாலை வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த குடும்பப் பெண்ணை கைது செய்துள்ளனர்.</p>
<p>உயிரிழந்தவரின் உடலில் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்ட 5 க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-wife-who-beat-her-husband-to-death-by-tiruvalai/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு !</title>
		<link>https://tamilnaadi.com/news/rishads-wife-and-father-in-law-released-on-bail/</link>
					<comments>https://tamilnaadi.com/news/rishads-wife-and-father-in-law-released-on-bail/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 12:58:03 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hirushalini]]></category>
		<category><![CDATA[rishad Batheiudeen]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[கொழும்பு நீதவான் நீதி மன்றம்]]></category>
		<category><![CDATA[சந்தேகம்]]></category>
		<category><![CDATA[சிறுமி கிருஷாலினி]]></category>
		<category><![CDATA[நீதிபதி]]></category>
		<category><![CDATA[ரிஷாட் பதியுதீன்]]></category>
		<category><![CDATA[விளக்கமறியல்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9964</guid>

					<description><![CDATA[ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு ! 16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியூதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி வரை இவரை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு !</h4>
<p>16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.</p>
<p>இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியூதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>எதிர்வரும் முதலாம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கியுள்ளார் .</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/rishads-wife-and-father-in-law-released-on-bail/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கணவனைக் கொன்ற இளம் பெண்-அதிர்ச்சி சம்பவம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/young-woman-her-husband/</link>
					<comments>https://tamilnaadi.com/news/young-woman-her-husband/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Sep 2021 17:40:34 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[puthucheri]]></category>
		<category><![CDATA[Tamilnaadu]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<category><![CDATA[மனைவி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5748</guid>

					<description><![CDATA[கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி (வயது-35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். சமீப காலமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி அன்று நள்ளிரவு நீண்ட நேரம் குடும்பத் தகராறு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.</p>
<p>தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி (வயது-35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.</p>
<p>சமீப காலமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி அன்று நள்ளிரவு நீண்ட நேரம் குடும்பத் தகராறு நடந்ததை அடுத்து மனைவி கணவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அமத்தியும் கொலைசெய்துள்ளார்.</p>
<p>காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என அயலவர்களுக்கு தெரிவித்தார்.</p>
<p>தகவலறிந்த வில்லியனூர் பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபோது, பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.</p>
<p>இதையடுத்து மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவர் கணவனைக் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.</p>
<p>அரசூரில் கறிக்கோழி கடைக்கு அடிக்கடி செல்லும்போது திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது-25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.</p>
<p>இது கள்ள உறவாக மாறியது. எங்கள் வீட்டில் மாடியிலேயே வாடகைக்கு குடியேறினார் அஜ்மீர். எங்கள் இருவருக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்துவிட்டதால் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 28 ஆம் திகதி தகராறு அதிகமானது.</p>
<p>இதையடுத்து நானும் அவனும் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்தும் தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என எல்லோரிடமும் சொன்னோம் எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/young-woman-her-husband/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
