<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கம்பநேசன் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 25 Sep 2021 13:52:04 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>கம்பநேசன் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நித்தமும் என் நெஞ்சில் நிலை! &#8211; கம்பநேசன்</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/poems/poem-kampanesan/</link>
					<comments>https://tamilnaadi.com/uncategorized/poems/poem-kampanesan/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Sep 2021 13:50:44 +0000</pubDate>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[Kampanesan]]></category>
		<category><![CDATA[Poem]]></category>
		<category><![CDATA[கம்பநேசன்]]></category>
		<category><![CDATA[நித்தமும் என் நெஞ்சில் நிலை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11690</guid>

					<description><![CDATA[(வெண்பா இலக்கணத்திற்கு அமையாதது) நெக்குருகி நேர்ந்தும்மை நெடுநாளாய்ப் பணியுமிந்த மக்கனுக்காய் மனமிரங்கக் கூடாதோ – பக்குவமாய் அறிவுக்கு அறிவாகி அகத்தினிலே அமர்ந்தென்றும் நெறி செய்யவேண்டும் நினை! பழம் பாகு பால் எதையும் படைத்தறியா எனக்கிரங்கி இளம் யானைக் கன்றனைய முகத்தோனே &#8211; வளம் ஈவாய் செந்தமிழால் உலகாண்டு சேமமுற நீ எனக்கு அந்தமிலா ஆற்றல் அளி! வாழப் பொருள் தந்து வளம் செழிக்கத் தமிழ் தந்து ஏழைச் சிறியேனை ஏற்றம் செய் &#8211; வேழமுக வித்தகனே! உன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>(வெண்பா இலக்கணத்திற்கு அமையாதது)</p>
<p>நெக்குருகி நேர்ந்தும்மை நெடுநாளாய்ப் பணியுமிந்த<br />
மக்கனுக்காய் மனமிரங்கக் கூடாதோ – பக்குவமாய்<br />
அறிவுக்கு அறிவாகி அகத்தினிலே அமர்ந்தென்றும்<br />
நெறி செய்யவேண்டும் நினை!</p>
<p>பழம் பாகு பால் எதையும் படைத்தறியா எனக்கிரங்கி<br />
இளம் யானைக் கன்றனைய முகத்தோனே &#8211; வளம் ஈவாய்<br />
செந்தமிழால் உலகாண்டு சேமமுற நீ எனக்கு<br />
அந்தமிலா ஆற்றல் அளி!</p>
<p>வாழப் பொருள் தந்து வளம் செழிக்கத் தமிழ் தந்து<br />
ஏழைச் சிறியேனை ஏற்றம் செய் &#8211; வேழமுக<br />
வித்தகனே! உன் பாதம் வேண்டித் தொழுதிட்டேன்<br />
நித்தமும் என்நெஞ்சில் நிலை!</p>
<p>நம்பிக்கும் ஒளவைக்கும் நல்லபெரும் கபிலர்க்கும்<br />
தெம்புதரும் தமிழ்த்தானம் செய்தவனே –கும்பிட்டேன்<br />
நீங்காமல் நீ என்றும் நெஞ்சினிக்கும் தமிழ் தந்து<br />
பாங்காக அருள்செய்யப் பார்!</p>
<p>வேண்டுவோர் உள்ளத்தில் வெளிப்பட்டுத் துணைசெய்யும்<br />
ஆண்டவனே அருள் நிறைந்த ஆனைமுகா! &#8211; நீண்டதோர்<br />
தும்பிக்கை உண்டென்னும் துணிவுடனே பணிந்தேத்தி<br />
நம்பிக்கை கொள்கின்றேன் நான்!</p>
<p>இல்லாமை கூடி இருப்பெல்லாம் தொலைந்து போய்ப்<br />
பொல்லாப்பு நேருகிற புவனியிலே &#8211; வல்லோனே<br />
பச்சிளம் பிள்ளைக்கே பால்மா இங்கில்லையிவ்<br />
அச்சத்தை அகற்றுவார் ஆர்!</p>
<p>உள்ளாடை கூட இனி உள்ளகடை கிடையாது<br />
சொல்லாடி என்ன பயன் சொல்லிடுவாய் &#8211; நில்லாது<br />
பட்டினத்தார் பாதைதான் சரி என்று தேறலாம்<br />
கட்டியதும் பழக்கமில்லைக் காண்!</p>
<p>கோவணம் தான் கதி என்ற கோதாரி நிலைஆச்சு<br />
பூவனத்தில் நீர் இருந்து பூரித்தீர் &#8211; தாவுமயில்<br />
ஏறிப் பறந்துபோய் எழில் ஆண்டியாய் நின்றான்<br />
கூறியதாம் கொள்கை குறி!</p>
<p>பள்ளிக்குப் போய் அறியாப் பாலரினம் வீட்டிருந்து<br />
சல்லித் தனமாகத் சரிகிறதே–கொள்ளிவைத்த<br />
ஒண்லைனாம் வகுப்பினிலே உயிர் விட்ட பிஞ்சுகளை<br />
தண்ணளி கொண்டணைக்கவரம் தா!</p>
<p>மரணங்கள் மலிகிறது மன்றாட்டம் தொடர்கிறது<br />
அரனே நீ அமைதியுறல் கூடுமோ &#8211; வரம் தந்து<br />
வாழ வழி காட்டு வளம் பெறட்டும் மனிதகுலம்<br />
ஊழகல உடனிருந்து உழை!</p>
<p>இருவேளை உணவுதான் இப்போதைக் காகுமென<br />
அருள் இல்லா அமைச்சரின் அறிவிப்பு-பொருளில்லா<br />
சங்கடத்தில் சாதலே சால்பென்பேன் ஐயகோ !<br />
தங்குமோ எங்கள் சகம்!</p>
<p>சீனாவை நம்பி சிறப்பென்று மாண்டு போய்<br />
தானாய் அழிந்த கதை சாற்றினால் &#8211; வீணாக<br />
உள்ளாடையும் இன்றி உருண்டோடவும் முடியா<br />
பொல்லாத நிலையெனக்கேன் போ!</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/uncategorized/poems/poem-kampanesan/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
