<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐ.தே.க. மாநாடு தொடர்பில் கடும் விமர்சனம் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%90-%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 23 Oct 2023 01:50:12 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>ஐ.தே.க. மாநாடு தொடர்பில் கடும் விமர்சனம் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஐ.தே.க. மாநாடு தொடர்பில் கடும் விமர்சனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/lot-of-criticism-regarding-unp-conference/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Oct 2023 01:50:12 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Lot Of Criticism Regarding Unp Conference]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[United National Party]]></category>
		<category><![CDATA[ஐ.தே.க. மாநாடு தொடர்பில் கடும் விமர்சனம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=100536</guid>

					<description><![CDATA[ஐ.தே.க. மாநாடு தொடர்பில் கடும் விமர்சனம் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (21.10.2023) நடைபெற்றது. மாநாட்டில் வரவேற்புரையை கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆற்றினார். மாநாட்டு கூட்ட யோசனைய அறிவித்து பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார உரையாற்றினார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p><em><strong>ஐ.தே.க. மாநாடு தொடர்பில் கடும் விமர்சனம்</strong></em></p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (21.10.2023) நடைபெற்றது.</p>
<p>மாநாட்டில் வரவேற்புரையை கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆற்றினார். மாநாட்டு கூட்ட யோசனைய அறிவித்து பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார உரையாற்றினார்.</p>
<p>அத்துடன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கும் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வந்த அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.</p>
<p>எனினும், தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் உரையாற்றவில்லை.</p>
<p>வழமையாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்படும். ஆனால், இந்த மாநாட்டில் நேரம் வழங்கப்படவில்லை.</p>
<p>குறைந்தபட்சம் தமிழ்மொழியில் உரையாற்றக்கூடிய ஒருவருக்காவது வாய்ப்பளித்திருக்கலாம் எனக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>&#8220;இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கக்கூடிய கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சி.</p>
<p>அதன் தலைவர் தற்போதைய ஜனாதிபதி முற்போக்கு சிந்தனை உடையவர். அப்படி இருக்கையில் தமிழ் பேசும் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை வேதனையளிக்கின்றது.&#8221; என கட்சியின் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
