<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எதிர்க்கட்சி &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 04:38:43 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>எதிர்க்கட்சி &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது! – மனுஷ நாணயக்கார</title>
		<link>https://tamilnaadi.com/news/the-bud-virus-is-dangerous-to-the-country/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-bud-virus-is-dangerous-to-the-country/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 18:52:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ajith Nivard Cabral]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[goverment]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[Manusha Nanayakkara]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[அஜித் நிவார்ட் கப்ரால்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சிஐடி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[மத்திய வங்கி]]></category>
		<category><![CDATA[மனுஷ நாணயக்கார]]></category>
		<category><![CDATA[ராஜபக்சவினர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10984</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை நாசப்படுத்த முயலும் வைரஸை நாடு கடத்திவிடுவதாகும். இந்த நாட்டிலிருந்து மொட்டு வைரஸ் மற்றும் ராஜபக்ச வைரஸை ஒழிக்க நாம் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ராஜபக்‌ஷ வைரஸால் நாடு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை நாசப்படுத்த முயலும் வைரஸை நாடு கடத்திவிடுவதாகும். இந்த நாட்டிலிருந்து மொட்டு வைரஸ் மற்றும் ராஜபக்ச வைரஸை ஒழிக்க நாம் கைகோர்க்க வேண்டும்.</p>
<p>இவ்வாறு ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p>
<p>ராஜபக்‌ஷ வைரஸால் நாடு முழுவதும் மோசமாகிவிட்டுள்ளது. நாட்டை முடக்கி விட்டு பெரிய வணிகர்களும் தங்கள் கூட்டாளிகளுக்கும் அத்தியாவசிய பொருள்களை கொண்டுவர அனுமதித்துவிட்டு ஒரு பொருளாதார வைரஸை செயல்படுத்தியவண்ணமுள்ளனர்.</p>
<p>மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் நியமிக்கப்பட்டார். நிதிச் சட்டத்தின்படி, ஒரு அரசியல்வாதியையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரையோ இதற்காக நியமிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் மொட்டுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் ஆகியோர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>நாட்டின் சொத்துக்களை விற்கமாட்டோம் என்றே சொன்னார்கள். விற்றதை திரும்பப் பெறுவதாகக் கூறினார்கள். ஆனால் இவர்கள் வந்த நாளிலிருந்து நிலத்தை விற்று வருகின்றனர். தற்போது நாட்டில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களின் உரிமைகளையும் மூன்று நாடுகளுக்கு கையளிக்கும் நிலை ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது.</p>
<p>எதிர்க்கட்சியாக நாங்கள் குரல் எழுப்புகிறோம்.இவை அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் இரகசியமாகவே செயற்படுத்தப்படுகிறது. இந்த விடயங்களைப் பற்றி நாம் பேசினால், எம்மை ஒதுக்கி இழுக்கவே முயற்சிக்கிறார்கள்.</p>
<p>கொரோனா வைரஸை முன்னணியில் வைத்து தான் அரசாங்கம் தனது இருப்பை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. மின் உற்பத்தி நிலையங்கள் விற்பனைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த நேரத்தில் மக்கள் தங்கள் வயிற்றை இறுக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>
<p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு என்னை வரச் சொன்னார்கள். ஆனால் அழைத்த காரணம் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொருவரும் அழைக்கப்பட காரணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் ஆணவத்தால் தான் இந்த விடயத்தை குறிப்பிடாமல் சமூகமளிக்குமாறு சொல்கிறார்கள். நாம் பேசும்போது வாயை மூட வைக்கவே இவ்வாறு அழைத்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-bud-virus-is-dangerous-to-the-country/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசிடம் சிறந்த திட்டம் இல்லை  &#8211; எதிர்க்கட்சி சாடல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-government-does-not-have-a-better-plan/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-government-does-not-have-a-better-plan/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Sep 2021 16:43:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Rohini Kaviratne]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி]]></category>
		<category><![CDATA[ரோஹினி கவிரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7730</guid>

					<description><![CDATA[அரசிடம் சிறந்த திட்டம் இல்லை &#8211; எதிர்க்கட்சி சாடல்! தற்போதைய அரசிடம் நாட்டை நிர்வகிக்கக்கூடிய சிறந்த திட்டமிடல் இல்லை. இதனால் நாடு பொருளாதாரத்தில் படுபாதாள நிலைக்கு சென்றுவிட்டது. நாட்டு மக்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது. இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மேற்படி தெரிவித்துள்ளார். இன்றைய அரசாங்கம் நாட்டின் மக்களை அடக்க நாடாளுமன்றில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மாணவர்களின் கல்வி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அரசிடம் சிறந்த திட்டம் இல்லை &#8211; எதிர்க்கட்சி சாடல்!</h4>
<p>தற்போதைய அரசிடம் நாட்டை நிர்வகிக்கக்கூடிய சிறந்த திட்டமிடல் இல்லை. இதனால் நாடு பொருளாதாரத்தில் படுபாதாள நிலைக்கு சென்றுவிட்டது. நாட்டு மக்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது. இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p>
<p>இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மேற்படி தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்றைய அரசாங்கம் நாட்டின் மக்களை அடக்க நாடாளுமன்றில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.</p>
<p>மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக சரிந்துள்ளன. பாடசாலைகளைத் திறக்க திட்டங்களும் இதுவரை இல்லை.12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உலகின் ஏனைய நாடுகள் தடுப்பூசி போடும்போது, அதை வழங்க எம் நாட்டில் எந்த திட்டமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.</p>
<p>இணைய வழி கற்றலில் 40 வீத மாணவர்களே பயனடைகின்றனர், 60 வீதமான மாணவர்களுக்கு முறையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கல்வியை மேம்படுத்துவதற்காக இந்த அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?</p>
<p>மேலும் பெரும்போக பருவத்துக்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளன, நெல் மற்றும் சோளக பயிர்ச்செய்கைக்கு நிலத்தை தயார்படுத்த வேண்டும். களைகளை கட்டுப்படுத்துவது அதன் முதல் பணி. களைகளை கட்டுப்படுத்தாமல் இந்த கனமழையால் விவசாயத்தை தொடர்வதில் சிக்கல் உள்ளது.</p>
<p>விவசாய சேவை மையங்கள் மூலம் பூஞ்சை கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிகொல்லிகள் விநியோகிக்கப்படுகின்றன என திணைக்களம் கூறுகிறது. ஆனால் 50 லீட்டர் மற்றும் 400 கிரேம் பீடை நாசினிகளை பெற நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டும். சிலர் வெறும் கைகளுடன் வீடுகளுக்கு திரும்புகின்றனர். இதற்கு அரசிடம் சரியான திட்டம் இல்லை.</p>
<p>சீனி இறக்குமதிக்கு ஏகபோக உரிமையை ஒரு நிறுவனங்களுக்கு கொடுத்ததன் விளைவுகளை ஒரு நாடாக நாம் அனுபவித்து வருவதை நாங்கள் பார்த்தோம். இத்தகைய முடிவால் உரங்களுக்கு மிகப்பெரிய விலை உயர்வும் அதனால் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும்.</p>
<p>இந்த நாடு உணவுப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் குறியீட்டில் 66 ஆவது இடத்திலிருந்து மேலும் வீழ்ச்சியடைகிறது. இவ்வாறு சென்றால் கொரோனாத் தொற்றைவிட பட்டினி அதிகரிக்கும்.</p>
<p>நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முதுகெலும்பு இல்லை என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். அதனால் தான் இந்த நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அரசாங்கம் கூறுவது ஒன்று. செயற்படுவது பிரிதொன்றாகவுள்ளது. எனவே சிறந்த திட்டத்தை செயற்படுத்தினாலே நாட்டை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-government-does-not-have-a-better-plan/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற நடைமுறை தெரியாத கோத்தா அரசு!!- எதிர்க்கட்சி கோஷம்</title>
		<link>https://tamilnaadi.com/news/gota-government-did-not-know-the-parliamentary-procedure/</link>
					<comments>https://tamilnaadi.com/news/gota-government-did-not-know-the-parliamentary-procedure/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 21:19:53 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி]]></category>
		<category><![CDATA[கோத்தா அரசு]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற நடைமுறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7494</guid>

					<description><![CDATA[கோத்தா அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற நடைமுறை தெரியாதவர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பியுள்ளனர். நிதி சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நிதி அமைச்சிடம் கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் தயாராக இருந்தனர். கொரோனா முடக்கலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னர் 5 ஆயிரம் ரூபா வழங்கினீர்கள். இப்போது 2 ஆயிரம் ரூபா வழங்குகிறீர்கள். இந்த பயனாளர் தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது. எல்லோருக்கும் இந்த கொடுப்பனவு சென்றடைகிறதா என்று எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது சபையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கோத்தா அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற நடைமுறை தெரியாதவர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பியுள்ளனர்.</p>
<p>நிதி சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நிதி அமைச்சிடம் கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் தயாராக இருந்தனர்.</p>
<p>கொரோனா முடக்கலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னர் 5 ஆயிரம் ரூபா வழங்கினீர்கள். இப்போது 2 ஆயிரம் ரூபா வழங்குகிறீர்கள். இந்த பயனாளர் தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது. எல்லோருக்கும் இந்த கொடுப்பனவு சென்றடைகிறதா என்று எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டது.</p>
<p>இதன்போது சபையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் சபையில் இருக்கவில்லை .</p>
<p>கோபம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உங்கள் அரசுக்கு நாடாளுமன்ற நடைமுறை தெரியாதா? கேள்விக்கு பதில் வழங்குவதற்கு சபையில் துறை சார்ந்த அமைச்சர் இல்லை என கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/gota-government-did-not-know-the-parliamentary-procedure/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
