<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்தோ- பசுபிக் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 26 Sep 2021 14:12:37 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>இந்தோ- பசுபிக் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? &#8211; அ.நிக்ஸன்</title>
		<link>https://tamilnaadi.com/articles/will-india-sign-an-agreement-with-sri-lanka/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/will-india-sign-an-agreement-with-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Sep 2021 10:10:03 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[australia]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[france]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Indo-Pacific]]></category>
		<category><![CDATA[Nixon]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[அ.நிக்ஸன்]]></category>
		<category><![CDATA[இந்தோ- பசுபிக்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=12516</guid>

					<description><![CDATA[இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? &#8211; பூகோள அரசியல் மாற்றங்கள் தரும் எச்சரிக்கை பூகோள அரசியல் நகர்வுகளில் எழக்கூடிய மாற்றங்கள் அதனால் உருவாகும் வல்லாதிக்கப் போட்டிகள் இலங்கை போன்ற நாடுகளும்,  அந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய இனங்களுக்கும் அடுத்த என்ன செய்ய வேண்டுமென்ற செய்தியைச் சொல்லுகின்றன. &#160; பூகோள அரசியல் மாற்றங்களை சாதகமாகப் பயன்படுத்தும் இலங்கை ஆட்சியாளர்கள் இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<div></div>
<div><strong>இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? &#8211;</strong></div>
<div><strong>பூகோள அரசியல் மாற்றங்கள் தரும் எச்சரிக்கை</strong></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div>பூகோள அரசியல் நகர்வுகளில் எழக்கூடிய மாற்றங்கள் அதனால் உருவாகும் வல்லாதிக்கப் போட்டிகள் இலங்கை போன்ற நாடுகளும்,  அந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய இனங்களுக்கும் அடுத்த என்ன செய்ய வேண்டுமென்ற செய்தியைச் சொல்லுகின்றன.</div>
<div>
<div class="adL">
<p>&nbsp;</p>
<p><strong>பூகோள அரசியல் மாற்றங்களை சாதகமாகப் பயன்படுத்தும் இலங்கை ஆட்சியாளர்கள் </strong></p>
<p>இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து இலங்கையை தெற்காசியப் பிரந்தியத்தில் முக்கியத்துவம் உள்ள நாடாக மாற்ற வேண்டுமென்ற நோக்கில் பூகோள அரசியல் மாற்றங்களைச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.</p>
<p>அமெரிக்க &#8211; இந்திய நெருக்கம், பாகிஸ்தான் &#8211; அமெரிக்க முரண்பாடு, பாகிஸ்தான் &#8211; சீன உறவு, பாகிஸ்தான் &#8211; இந்திய மோதல், இந்திய &#8211; ஜப்பான் உறவு ஆகியவற்றைக் கடந்து இலங்கை இந்த நாடுகளுடன் தமது உறவைப் பேணுகின்றது. ஏனெனில் அது சிறிய நாடு, ஆனாலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் சமாந்தரமான உறவை இலங்கை பேணுகின்றது. இதற்காக புதுடில்லியை அவ்வப்போது பகைத்துக் கொண்டதும் உண்டு.</p>
<p><strong>அமெரிக்க ஆதரவு போக்கை பின்பற்றும் இலங்கை</strong></p>
<p>கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிருத்தி தொடர்பான உடன்படிக்கையை இலங்கை கைவிட்டமை உள்ளிட்ட பல விவகாரங்களில் இலங்கை சீனச் சார்பை வெளிப்படுத்தினாலும் அமெரிக்க ஆதரவுப் போக்கையே இலங்கை எடுத்திருந்தது.</p>
<p>ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கை கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிருத்தி குறித்த உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தமைக்கு அமெரிக்க ஒத்துழைப்பு இருந்தது. ஆனாலும் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை அண்மித்த இலங்கைக் கடற்பகுதியில் சீனாவுக்கு முக்கியத்தும் வழங்கப்பட்டிருந்த நிலையில், கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியா பங்களிப்புச் செய்வதை விரும்பவில்லை என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே காண்பித்திருந்தனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="wp-image-12586 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-6.43.27-AM-300x169.jpeg" alt="WhatsApp Image 2021 09 26 at 6.43.27 AM" width="971" height="550" title="இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? - அ.நிக்ஸன் 6"></p>
<p><strong>மென்போக்கை கையாளும் இந்தியா</strong></p>
<p>ஆனால் இதுவரையும் இலங்கையோடு இந்தியா மென்போக்கையே கையாண்டு வருகின்றது. 2009 இற்கு முன்னரான காலத்திலும், அதன் பின்னரான சூழலிலும் இலங்கையை இந்தியா செல்லப்பிள்ளையாகவே கையாளுகின்றது. அதேநேரம் அமெரிக்காவும் இந்தியாவைக் கடந்து இலங்கையோடு மிகவும் நேசமான உறவைப் பேணுகின்றது. பாகிஸ்தானோடு அமெரிக்கா முரண்பட்டுக் கொண்டாலும் இந்தியாவை மேலும் தமது பக்கம் ஈர்க்க வேண்டியதொரு சூழல் தோன்றினால் அமெரிக்கா 2004 ஆம் ஆண்டு போன்று மீண்டும் பாகிஸ்தானோடு கூட்டாளி உறவை உருவாக்கலாம்.</p>
<p>இதன் பின்புலத்திலேதான் அக்கியூஸ் ஒப்பந்தத்தை நோக்க வேண்டும். ஆசியாவின் நேட்டோ அணி என்ற புகழாரத்தோடு 2017 இல் மீளப் புதுப்பிக்கப்பட்ட குவாட் அமைப்புக்கு மாற்றீடாக அல்லது அதனையும்விட அணு சக்தியைக் கையாளும் நோக்கில் உருவாக்கப்படட அக்கியூஸ் ஒப்பந்தம், தெற்காசிப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு பாதிப்பை அல்லது இந்தியாவின் இராணுவப் பலத்தை மதிப்பிழக்கச் செய்யும் என்ற நோக்கம் அமெரிக்காவுக்கு ஏன் இல்லாமல்போனது என்ற கேள்விகள் உண்டு.</p>
<p>இதுவரையும் இந்தியாவும் அவ்வாறு கேள்வி எழுப்பவில்லை. இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட பிரான்ஸ் அவுஸ்திரேலியாவைத் திட்டியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கோணத்திலும் பிரித்தானியாவின் அமைதியான அடக்குமுறை என்ற வர்ணனையோடும் பிரான்ஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுமுள்ளது.</p>
<p><strong>பிரான்ஸுடன் கைகோர்க்கும் இந்தியா</strong></p>
<p>இந்த நிலையில், இந்தோ &#8211; பசுபிக் விவகாரங்களில் பிரான்ஸுடன் இந்தியா கைகோர்க்குமென நரேந்திரமோடி சமூகவலைத்தளத்தில் கூறியிருக்கிறார். ஜனாதிபதி மைக்ரோனுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் இந்தப் பதிவை மோடி வெளியிட்டிருக்கிறார். ஆகவே அக்கியூஸ் ஒப்பந்தம் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளது என்பதையே அந்த உரையாடல் காண்பிக்கிறது. ஆனாலும் துணிவோடு அக்கியூஸ் ஒப்பந்தத்தை மோடி இதுவரை கண்டிக்கவேயில்லை.</p>
<p>மாறாக நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்தோ- பசுபிக் விவகாரம் குறித்த குவாட் மாநாட்டிலும் மோடி பங்குபற்றியிருக்கிறார். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலியா பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் சேர்ந்து அவுஸ்திரேலியா அக்கியூஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதால், அந்த இடத்தை பிரான்ஸுடன் இணைந்து ஏன் இந்தியாவால் நிரப்ப முடியாது என்ற கேள்வியும் உண்டு. அல்லது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கையாளும் தகுதி இந்திய இராணுவத்துக்கு இல்லையா?</p>
<p>உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், குரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது எனப் பல்வேறு அம்சங்கள் இந்த அக்கியூஸ் ஒப்பந்தத்தில் உண்டு. பாதுகாப்புக் கூட்டணியாக இணைந்து செயற்படவுள்ள இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் உள்ளபடி நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளன. ஆனால் குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலாயாவும் அமெரிக்காவும் இந்த அக்கியூஸ் ஒப்பந்தம் குறித்து குவாட் அங்கத்துவ நாடான ஜப்பானுடன்கூட எதுவுமே உரையாடவில்லை.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-12588" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/America-Flag--300x201.jpg" alt="America Flag" width="982" height="658" title="இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? - அ.நிக்ஸன் 7" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/America-Flag--300x201.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/America-Flag--1024x686.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/America-Flag--768x515.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/America-Flag--scaled.jpg 1074w" sizes="(max-width: 982px) 100vw, 982px" /></p>
<p><strong>தனித்து கால் பதிக்க முற்படும் அமெரிக்கா</strong></p>
<p>ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் முதன்மை பெற வேண்டுமெனத் துடிக்கின்ற இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளைவிட இந்தோ- பசுபிக் பிராந்தியத்துக்குத் தொடர்பில்லாத அமெரிக்கா, இந்தியாவை மீறி அவுஸ்திரேலியாவோடு புதிய ஒப்பந்தத்தின் மூலமாக வேறு கோணத்தில் தனித்துக் கால்பதிக்க முற்படுகின்றமை பட்டவர்த்தனமாகியுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியாவின் இணக்கம் என்பதுதான் இங்கே பிரதான பேசுபொருளாகும்.</p>
<p>சீன எதிர்ப்பு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும். அமெரிக்க நகர்வுக்குத் தெற்காசிப் பிராந்தியத்தில் ஜப்பான் ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்பு இருக்காது. ஆனால் சிறிய நாடான இலங்கை ஆதரவு கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.</p>
<p>பாகிஸ்தான் தலிபான்கள் விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறையைப் பொறுத்தும், பாகிஸ்தான் இராணுவத்துக்கு நிறுத்தப்பட்டுள்ள நிதியுதவி மீண்டும் அமெரிக்காவால் வழங்கப்படுமாக இருந்தால், பாகிஸ்தானும் அக்கியூஸ் ஒப்பந்தம் பற்றிக் கண்டும் காணாமலும் இருக்கலாம்.</p>
<p><strong>இந்தோ &#8211; பசுபிக் பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்த முற்படும் அமெரிக்கா </strong></p>
<p>ஆகவே இந்தோ- பசுபிக், தென் சீனக் கடல் பாதுகாப்பு விவகாரம் என்பது, சீனாவை எதிர்கொள்வது என்ற போர்வையில் இந்தப் பிராந்தியங்களில் தமது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டுமென்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாகும். இதற்குப் பிரித்தானியா. அவுஸ்திரேலிய நாடுகள் மாத்திரமே உண்மையான பங்காளிகளாக இருப்பர் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா அக்கியுஸ் ஒப்பந்தத்தைத் தயரித்தது என்பது கண்கூடு.</p>
<p>இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஜி-7 மற்றும் நேட்டோ அணிகளோடு பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அனுபவம், படிப்பினையாக மாறியதன் விளைவே இந்த அக்கியுஸ் ஒப்பந்தம் என்றும் கூறலாம். குறிப்பாக கடந்த யூலை மாதம் இடம்பெற்ற ஜி-7 மற்றும் நோட்டோ மாநாடுகளில் பிரான்ஸ், வெளியிட்ட அமெரிக்க எதிர்ப்பு மையவாதக் கருத்துகள் ஜோ- பைடனைப் பாதித்திருக்கலாம்.</p>
<p><strong>நிதானமாக காய் நகர்த்தும் அமெரிக்கா</strong></p>
<p>முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிழையான நிர்வாகத்தால் ஜி-7, மற்றும் நேட்டோ ஆகிய அமைப்புகளின் செயற்பாடுகள் தற்காலிகப் பின்னடைவை எதிர்நோக்கின என பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அப்போது கருதியிருந்தன.</p>
<p>ஆனால் ஜே-பைடனின் புதிய அமெரிக்க நிர்வாகமும் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அதே அணுகுமுறையை சற்று நிதானமாக முன்னெடுத்து ஐரோப்பிய ஒன்றியம், ஜி-7 மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடுகளை நோகாமல் தூக்கியெறிகின்ற இராஜதந்திரத்தைக் கையாளுகிறது என்ற சந்தேகத்தை இந்த அக்கியூஸ் ஒப்பந்தம் தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறது.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-10865" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/akkk-300x169.jpg" alt="akkk" width="995" height="564" title="இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? - அ.நிக்ஸன் 8"></p>
<p><strong>அச்சுறுத்தலை உருவாக்கும் அக்கியூஸ் ஒப்பந்தம்</strong></p>
<p>அதேவேளை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பிரமாண்டமான பாதுகாப்புத் திறன்களைக் கொண்டிருக்கும். எனவே அக்கியூஸ் ஒப்பந்தம் பிராந்திய சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துமென ஆஸ்திரேலியப் பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் பிரிட்ஜ் கூறுகிறார். இவ்வாறான நிலையில், அக்கியூஸ் ஒப்பந்தம் சீனாவை மாத்திரமல்ல, இந்தியா உள்ளிட்ட ஆசியப் பிராந்தியத்துக்கும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அச்சுறுத்தல் என்பதில் ஜயமேயில்லை.</p>
<p>சர்வதேச விவகாரங்களில் பிரான்ஸ் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில், பிராந்திய விவகாரங்களில் தனியாக செல்லும் அமெரிக்க அணுகுமுறையின் மூலம் ஏனைய சர்வதேச செயற்பாடுகளிலும் மாறுதல்கள் அல்லது தற்காலிகத் தொய்வுநிலை உருவாக்கலாம். இந்த இடத்திலேதான் இந்தோ- பசுபிப் பிராந்தியத்தில் தன்னைத் தனித்துவம் மிக்க. சுயமரியாதையுள்ள நாடாக மாற வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.</p>
<p><strong>தனித்துவம் மிக்க நாடாக மாற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா</strong></p>
<p>இதுவரை காலமும் அமெரிக்காவோடு தங்கியிருந்த நிலைமாற வேண்டும். அமெரிக்கா மாத்திரமல்ல வேறெந்த வல்லாதிக்க நாடுகளோடும் இராணுவ ரீதியாகத் தங்கியிருக்காமல், சுயமாகச் செயற்படக்கூடிய அல்லது இந்தியவோடு இணைந்துதான் பயனிக்க வேண்டுமென்ற பலமானதொரு இராணுவ. அரசியல் நிலையை புதுடில்லி உருவாக்க வேண்டும்.</p>
<p>இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் பலவீனமான மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சிறிய நாடான இலங்கையை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற புதிய உத்தி ஒன்றையும் புதுடில்லி வகுக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இலங்கை எந்தெந்த அடிப்படையில் இந்தியாவைப் புறக்கணித்தது என்ற ஆதாரங்கள் உண்டு.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-12589" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/modi-300x169.jpg" alt="modi" width="995" height="564" title="இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? - அ.நிக்ஸன் 9"></p>
<p><strong>இலங்கையில் சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியிடுமா இந்தியா?</strong></p>
<p>ஆகவே ஆக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னரான சூழலில் இந்தோ- பசுபிக்கை மையமாகக் கொண்டு இந்தியா தன்னைப் பலப்படுத்த வேண்டுமானால், முதலில் இலங்கையில் சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும். அப்படி செய்வதென்றால் இலங்கையோடு பலமான ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய வேண்டும். 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தம் போன்றல்லாது, அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்காக வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய அரசியல் தீர்வு பரிந்துரைக்கப்பட வேண்டும்.</p>
<p>அப்போதுதான இலங்கையைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து சுயமாகத் தனித்துச் செயற்பட்டு அமெரிக்கா சீனா என்ற இரட்டை நிலைச் சார்புப் போக்கில் பழகிப்போன இலங்கையை இந்தியா எப்படித் தனது கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற கேள்வியும் உண்டு.</p>
<p><strong>இந்தியாவுக்கு கரி பூசிய இலங்கை</strong></p>
<p>ஏனெனில் இந்திராகாந்தி காலத்தில் இருந்தே இலங்கைக்கு இந்தியா விட்டுக் கொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் பலதடைவை புதுடில்லிக்கு முகத்தில் கரிபூசியுமுள்ளனர்.</p>
<p>ஆனாலும் இலங்கையைச் செல்லப்பிள்ளையாகக் கருதியதால், இந்தியாவுக்கு இலங்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இலகுவானதல்ல. அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கடினமான காரியமே.</p>
<p>எனினும் தற்துணிவுடன் இந்தியா இலங்கையோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தால், இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்காக இந்தியாவுடன் இணங்கித்தான் செல்ல வேண்டுமென்ற கட்டாயத்தையும்,  அக்கியூஸ் ஒப்பந்தத்தின் மூலம் தனித்துச் செயற்படும் வல்லாதிக்க இராணுவ, அரசியல் போக்கையும் சற்றுத் தணிக்கை செய்யலாம். அதாவது அமெரிக்காவைப் பணியச் செய்யலாம்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-12590" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ko-ma-300x171.jpg" alt="ko ma" width="984" height="561" title="இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? - அ.நிக்ஸன் 10" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ko-ma-300x171.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ko-ma.jpg 700w" sizes="(max-width: 984px) 100vw, 984px" /></p>
<p><strong>அணிசேராக் கொள்கைக்கு இந்தியா மீளத் திரும்புமா?</strong></p>
<p>இதற்கு பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா பெறவேண்டும். ரஷியாவுடனும் உறவைப் பேண வேண்டும். நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியமை இந்தோ- பசுபிக், தென் சீனக் கடல் விவகாரங்களில் அமெரிக்காவுக்குக் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கமே என்று இக் கட்டுரையாளர் முன்னர் கூறியிருந்தார். அதனையே தற்போது அக்கியூஸ் ஒப்பந்தமும் எடுத்துக்காட்டியுள்ளது.</p>
<p>ஆகவே அணிசேராக் கொள்கைக்கு இந்தியா மீளத் திரும்பியாக வேண்டும். ஆனால் அதற்கான தற்துணிவு மோடிக்கு இருக்கின்றதா? இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள். தீர்மானம் எடுப்போர் அதற்கு இடமளிப்பார்களா? அதுவும் ஈழத்தமிழர் அரசியல் விடுதலையுடன் கூடிய ஒப்பந்தம் ஒன்றுக்கு.</p>
<p><strong>இந்தியாவின் எச்சரிக்கைக்கு பணியாத சிங்கள ஆட்சியாளர்</strong></p>
<p>காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதைக் காரணம்கூறி 1992 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை இந்திய இராஜதந்திரம் கிடப்பில் போட்டிருக்கிறது. ஆனால்  இலங்கையைத் தமது புவிசார் நலனுக்காக  மாத்திரம் கட்டுக்குள் கொண்டு வருதற்காக  ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்து எச்சரிக்கை விடுத்தபோதும், சிங்கள ஆட்சியாளர்கள் அதற்கு அசைந்தபாடில்லை.</p>
<p>இதன் பின்புலத்திலேதான் இன்று இந்தியா எதிர்நோக்கியிருக்கும் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ நெருக்குவாரங்களையும் நோக்க வேண்டும்.</p>
<p>&nbsp;</p>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/will-india-sign-an-agreement-with-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் &#8211; அ.நிக்ஸன்</title>
		<link>https://tamilnaadi.com/articles/accus-agreement-and-new-delhi/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/accus-agreement-and-new-delhi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 03:00:46 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[australia]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Indo-Pacific]]></category>
		<category><![CDATA[isis]]></category>
		<category><![CDATA[LEMOA]]></category>
		<category><![CDATA[QUAD]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[அ.நிக்ஸன்]]></category>
		<category><![CDATA[இந்தோ- பசுபிக்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10847</guid>

					<description><![CDATA[அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் &#8211; இலங்கையைக் கையாளத் தவறியதன் விளைவா? அமெரிக்கா &#8211; இங்கிலாந்து &#8211; அவுஸ்திரேலியா இணைந்து புதிய ஒப்பந்தம்  இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை மையமாகக் கொண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றில் சென்ற புதன்கிழமை இரவு கைச்சாத்திட்டுள்ளன. மூன்று நாடுகளும் இணைந்து கைச்சாத்திட்ட அக்கியூஸ் (Aukus) என்ற இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய தென் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<div>
<h1><strong>அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் &#8211;</strong></h1>
<h2><strong>இலங்கையைக் கையாளத் தவறியதன் விளைவா?</strong></h2>
</div>
<div><strong>அமெரிக்கா &#8211; இங்கிலாந்து &#8211; அவுஸ்திரேலியா இணைந்து புதிய ஒப்பந்தம் </strong></div>
<div></div>
<div>இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை மையமாகக் கொண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றில் சென்ற புதன்கிழமை இரவு கைச்சாத்திட்டுள்ளன.</div>
<div><img loading="lazy" decoding="async" class="wp-image-10865 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/akkk-300x169.jpg" alt="akkk" width="509" height="287" title="அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் - அ.நிக்ஸன் 17" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/akkk-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/akkk.jpg 750w" sizes="(max-width: 509px) 100vw, 509px" /></div>
<div>
<p>மூன்று நாடுகளும் இணைந்து கைச்சாத்திட்ட அக்கியூஸ் (Aukus) என்ற இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியென பிபிசி செய்திச்சேவை கூறுகின்றது.</p>
<p>அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரின் கூட்டு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.</p>
<p>ஆனால் இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களில் இந்தியாவுக்கு அழைப்பு இல்லை.</p>
</div>
<div>
<p>இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மூன்று நாடுகளுக்கு இடையேயான மிக முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடாக அக்கியூஸ் பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்ளதாக அமெரிக்காவின் பாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்துள்ளது.</p>
<p>எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா தலைமையிலான குவாட் (The Spirit of QUAD) அமைப்பின் மாநாடு நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள நிலையில் புதன்கிழமை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.</p>
</div>
<div></div>
<div><strong>இந்தியாவை தனிமைப்படுத்துமா?</strong></div>
<div></div>
<div>அமெரிக்கா. ஜப்பான். அவுஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கவுள்ள ஆசிய நோட்டோ இராணுவ அணி என்று வர்ணிக்கப்பட்டு வரும் சூழலில் இந்தப் பிராந்தியப் பாதுகாப்புக்கான அக்கியூஸ் ஒப்பந்தம் இந்தியாவுக்குக் கவலையளித்திருக்கலாம்.</div>
<div></div>
<div>ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறியுள்ளதால் தலிபான்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துமென அமெரிக்கா  எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், மேற்படி மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தம் இந்தியாவைத் தனிமைப்படுத்</div>
<p><img loading="lazy" decoding="async" class="wp-image-10855 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nato-300x200.jpg" alt="nato" width="504" height="336" title="அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் - அ.நிக்ஸன் 18" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nato-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/nato.jpg 512w" sizes="(max-width: 504px) 100vw, 504px" /></p>
<div>துமோ என்ற அச்சம் டில்லிக்கு உருவாகலாம்.</div>
<div>தலிபான்களுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ  உளவு அமைப்புக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வான்வழி தாக்குதல்களை நடத்தும்  வாய்ப்புகளை அமெரிக்கா, இந்தியாவுடன் ஆராய்ந்து வருகின்றது.</div>
<div>
<div></div>
<div>இந்த நிலையில், அக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னர்தான்  ஆப்கானிஸ்தானில் இருந்து ஏன் நேட்டோ படைகள் விலகின என்பது குறித்து இந்தியா சிந்திக்கவும் ஆரம்பிக்கலாம்.</div>
<div></div>
<div>புவிசார் பூகோள அரசியல் நிலமைகளைத் தூரநோக்கில் சிந்தித்துத் செயற்படுத்தும் ஆற்றல் அமெரிக்காவுக்கு உண்டு. என்ற அடிப்படையிலேயே இந்தோ- பசுபிக், தென் சீனக் கடல் பாதுகாப்பு விகாரங்களில் இந்தியாவை அமெரிக்கா ஈடுபடுத்தியிருக்கிறது.</div>
<div></div>
<div>இதனாலேயே குவாட் அமைப்பை 2017 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் செயற்படுத்தியுமிருந்தார்.</div>
<div></div>
<div>இந்த நிலையில் அக்கியூஸ் ஒப்பந்தம் எந்த வகையில் குவாட்டோடு  ஒத்துழைத்துச் செயற்படும் என்ற கேள்விகள் எழுலாம்.</div>
<div></div>
<div>2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா இந்தியாவோடு செய்து கொண்ட மூன்று ஒப்பந்தங்களும் மேற்படி பிராந்திய ஆதிக்கத்தை மையமாகக் கொண்டதுதான். ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்குப்<wbr /> பின்னரான சூழலில் அந்த ஒப்பந்தங்களை அமெரிக்கா வேகமாகச் செயற்படுத்துகின்றது.</div>
<div></div>
<div></div>
<div><strong>லெமோ ஒப்பந்தம்</strong></div>
<div></div>
<div>குறிப்பாக 2016 ஆம் ஆண்டு லெமோ எனப்படும் மூலோபாயப் பரிமாற்ற ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement- LEMOA)  ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா இந்தியாவுடன் கையெழுத்திட்டது.</div>
<div></div>
<div>இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா, அமெரிக்காவின் மற்றுமொரு இராணுவத் தளமாக மாறுமென்ற அச்சத்தை இந்தியாவின் சில பிரதான நாளேடுகள் அப்போது வெளியிட்டிருந்தன. ஆனால் அப்படியில்லையென மோடி அரசாங்கம் உடனடியாக மறுத்துமிருந்தது.</div>
<div><img loading="lazy" decoding="async" class="wp-image-10866 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/lemo-300x169.jpg" alt="lemo" width="497" height="280" title="அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் - அ.நிக்ஸன் 19" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/lemo-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/lemo.jpg 640w" sizes="(max-width: 497px) 100vw, 497px" /></div>
<div></div>
<div>இதனால் இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கொம்காசா எனப்படும் தொடர்பு இணக்கத் தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை  (Communications Compatibility and Security Agreement- COMCASA)  அமொிக்காவும் இந்தியா<wbr />வும் 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடடன.</div>
<div>
<p>இந்த ஒப்பந்தம் ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற இராணுவத்தால் பயன்படுத்தப்படும் அனைத்து அமெரிக்க தயாரிப்புகளுடன் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ளும் திறனை அதிகரிக்கிறது.</p>
</div>
<div>
<p>2020 ஆம் ஆண்டு பீகா எனப்படும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (Basic Exchange and Cooperation Agreement- BECA) இது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புவிசார்-புலனாய்வு முகாமைக்கு இடையிலான ஒப்பந்தமாகும்.</p>
<p>ஆகவே இந்த மூன்று ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பின்னரான பாகிஸ்தானை மையப்படுத்திய தலிபான்களின் செயற்பாடுகள் மற்றும் சீனாவைப் பிரதானப்படுத்தியுள்ள இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களை அமெரிக்கா இந்தியாவோடு இணைந்து முன்னெடுத்து வருகின்றமை பட்டவர்த்தனம்.</p>
<p>&nbsp;</p>
<p><strong>பீகா ஒப்பந்தம்</strong></p>
<p>பீகா எனப்படும் ஒப்பந்தம் இந்திய ஏவுகணைகள் மற்றும் அத்தகைய தரவு தேவைப்படும் ஆயுதமேந்திய ட்ரோன்களின் துல்லியத்தை அதிகரிக்கவும் இடமளிப்பதால், இந்தியாவில் இந்தே ட்ரோன் தாக்குதல்களை தலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் மீது  நடத்த அமெரிக்கா ஏற்பாடு செய்கிறது.</p>
<p>இது தொடர்பாக அமெரிக்க இந்தியப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சமீபத்தில் சந்தித்துப் பேசியிமிருக்கின்றனர்.</p>
<p>ஆகவேதான் இந்தியா அமெரிக்காவின் இராணுவ வியூகத்திற்குள் சென்றுவிட்டதெனக் கருத இடமுண்டு. ஏனெனில் எந்த நேரத்திலும் இந்தியப் படைத் தளங்கள், இந்தியத் துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடிய முறையிலான ஏற்பாடுகளுக்கு மோடி அரசாங்கம் வழிசமைத்துள்ளது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="wp-image-10867 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/agggggggggg-300x200.jpg" alt="agggggggggg" width="495" height="330" title="அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் - அ.நிக்ஸன் 20" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/agggggggggg-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/agggggggggg.jpg 600w" sizes="(max-width: 495px) 100vw, 495px" /></p>
<p>ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை விலக்குவதென டொனால்ட் ட்ரம்ப் 2015 ஆம் ஆண்டே முடிவு செய்ததன் பின்னணில், மேற்படி மூன்று ஒப்பந்தங்களும் இந்தியாவுடன் செய்யப்பட்டிருக்கலாம் என்று யாரும் கருதினால், அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.</p>
<p>ஏனெனில் பூகோள அரசியல் ரீதியான இராணுவத் தீர்மானங்களை அமெரிக்கா ஒருபோதும் திடீரென மேற்கொள்வதில்லை.</p>
</div>
<div>
<p>ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கும் திட்டம் என்பது சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் நோக்கமாக இருந்தாலும், படை விலகலின் பின்னரான பக்கவிளைவுகள் எப்படி அமையும் என்ற எதிர்வு கூறலையும் அமெரிக்கா 2015 ஆம் ஆண்டில் இருந்தே கணிப்பீடு செய்திருக்கும்.</p>
<p>அதன் பின்னணியில் இந்தியாவோடு 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பீகா எனப்படும் மூன்றாவது ஒப்பந்தம் அமைந்திருக்கலாம்.</p>
<p>ஆகவே இதன் சாதக பாதக விளைவுகளை இந்தியாவே தீர்மானிக்க வேண்டும். பாகிஸ்தான் மூலமாக தலிபான்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையலாமென முன்னாள் அமெரிக்கத் தூதுவர் நிக்கி கோலி விடுத்த எச்சரிக்கைகூட புதுடில்லியை மேலும் அமெரிக்க பக்கம் சாய வைக்கும் தந்திரோபாயம் என்பதில் சந்தேகமேயில்லை.</p>
</div>
<div>பாகிஸ்தான் தலிபான்களைப் பயன்படுத்தி இந்தியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டால், அதனைத் தடுக்க அமெரிக்கா விசுவாசமாக இந்தியாவுக்கு ஒத்துழைக்கும் என்பதைவிட, இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்கு இந்தியாவைத் தளமாக மாற்றும் முயற்சியிலேயே அமெரிக்கா ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் கூடுதலாக இருப்பதை மேற்படி ஒப்பந்தங்கள் காண்பிக்கின்றன.</div>
</div>
<div></div>
<div></div>
<div><strong>அக்கியூஸ் ஒப்பந்தம் ஏன்?</strong></div>
<div>
<div></div>
<div>இதன் பின்புலத்திலேதான் அக்கியூஸ் ஒப்பந்தம் ஏன் கைச்சாத்திடப்பட்டது என்ற கேள்விகளும் டில்லிக்கு எழலாம்.</div>
<div></div>
<div>ஆனாலும் அமெரிக்கச் செய்பாடுகள் இந்தியாவுக்கு  சிலவேளை தற்காலிகப் பாதுகாப்பைக் கொடுக்கலாம். இருந்தாலும் அக்கியூஸ் ஒப்பந்தத்தின் பின்னரான நீண்டதூர நோக்கில் இந்தியாவுக்கு ஆராக்கியமானதாக இருக்குமெனக் கூற முடியாது.</div>
<div></div>
<div>அத்துடன் அமெரிக்க ஏற்பாட்டில் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் குவாட்டின் அங்கத்துவ நாடுகளான அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து இந்தியாவுக்கு ஒத்துழைக்குமா என்பதும் சந்தேகமே.</div>
<div></div>
<div>ஆகவே  இந்தியா தனது சொந்த இராணுவ உத்தியை எவ்வாறு  வளர்த்தெடுக்கப்போகிறது என்ற கேள்விகளே விஞ்சியுள்ளன.குவாட் அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கினாலும்; இந்தியாவுக்கான முக்கியத்துவம் அங்கு குறைந்ததாகவே இருக்கலாமென இந்திய இராணுவத்துறை ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர்.</div>
<div><img loading="lazy" decoding="async" class="wp-image-10849 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/arrrr-300x205.jpg" alt="arrrr" width="527" height="360" title="அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் - அ.நிக்ஸன் 21" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/arrrr-300x205.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/arrrr-768x524.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/arrrr.jpg 794w" sizes="(max-width: 527px) 100vw, 527px" /></div>
<div>ஏனெனில் சீனாவுக்கு இந்தியாவுடன் இருக்கும் மோதலைப் போன்று, அமெரிக்காவுக்கு இல்லை. இந்திய- சீன எல்லைப் பிரச்சினை என்பது வேறு.</div>
<div></div>
<div>ஆனால் இந்தோ- பசுபிக் பிராந்திய ஆதிக்கமும்  இராணுவ மேலதிக்கம் மாத்திரமே அமெரிக்காவுக்குத் தேவை என்பதை அக்கியூஸ் ஒப்பந்தம் காண்பிக்கின்றது.</div>
<div></div>
<div>ஆகவே சீனாவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் மோதலை அவதானிக்கும்போது, சீனா விடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் பாரம்பரிய நட்பு நாடான ரஷ்யாவை ஈடுபடுத்தினால், தனது பழைய அணிசேராக் கொள்கைக்கு இந்தியா மீண்டும் திரும்புமா என்ற கேள்வி எழும். (ரஷ்யா இன்றுவரை  இந்தியாவுடன் தொடர்ந்து உறவைப் பேண விரும்புகின்றது)</div>
<div></div>
<div>அப்படியில்லையேல் நட்பு நாடுகள் போன்று காண்பிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் பங்குதாரர்களான பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைத் தனது இந்தோ-பசிபிக் பாதுகாப்புத் தந்திரோபாயத்துக்குள் கொண்டுவருவதன் ஊடாக பல்வேறு அணிகளில் சேருதல் என்ற உத்தியை இந்தியா பின்பற்றுமா என்ற கேள்விகளும் எழாமலில்லை.</div>
<div>
<p>அல்லது  அக்கியூஸ் ஒப்பந்தத்தால் ஆத்திரமடைந்துள்ள பிரான்ஸ் நாட்டோடு உரையாடி தனது ஆதங்கத்தையும் இந்தியா வெளிப்படுத்துமா? அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் உள்ள தனது தூதுவர்களை பிரான்ஸ் அழைத்து  அக்கியூஸ் உடன்படிக்கையின் விளைவுகள் குறித்து உரையாடுவது போன்று இந்தியாவும் தமது தூதுவர்களை அழைத்து உரையாடுமா?</p>
<p>அல்லது சீனாவின் எதிரிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள புதுடில்லி முயற்சிக்குமா அல்லது ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்குப் பின்னரான அமெரிக்க- சீனப் பனிப்போரில், இந்தியா தனக்கெனத் தனியான சுயமரியாதைக் கட்டமைப்பு ஒன்றை வகுத்துக்கொள்ளுமா என்ற கேள்விகளும் உண்டு.</p>
</div>
<div>
<p>&nbsp;</p>
<p><strong>அமெரிக்கத் தந்திரோபயம்</strong></p>
<p>ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்புரிமை இல்லாத நிலையிலும், கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்க அனுமதிக்கப்பட்டமைகூட அமெரிக்கத் தந்திரோபயமே என்பது கண்கூடு.</p>
<p>ஏனெனில் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் தனது மேலான்மையை உறுதிப்படுத்தி இராணுவ மற்றும் பொருளாதார நலன்களைப் பலப்படுத்த வேண்டுமென்ற அமெரிக்கச் சிந்தனைக்கு இந்தியா அவசியம் தேவைப்படுகின்றது.</p>
<p>இதற்காகவே தலிபான்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தலாமென்ற அமெரிக்க எச்சரிக்கையும், இந்தியாவில் இருந்தே ட்ரோன் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிடும் உத்தியும் வகுக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். ஆகவே அமெரிக்க நலனுக்காகவே இந்தியா பயன்படுத்தப்படுகின்றது.</p>
</div>
<div>
<p>மாறாக சீன- இந்திய மோதலைத் தடுக்கவோ அல்லது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைவிட இந்தியாவைப் பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கிலோ அல்ல. இதனை  அக்கியூஸ் ஒப்பந்தம் வெளிப்படுத்துகின்றது.</p>
<p>ஆனால் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில்கூட இந்தியா ஆதிக்கம் செலுத்தியிருக்கக்கூடிய புவிசார் அரசியல் போக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான சூழலில் தாராளமாகவே இருந்தது. அப்போது ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டதை்தை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கையும் இந்தியாவை நம்பியிருந்தது.</p>
</div>
</div>
<p>&nbsp;</p>
<p><strong>பாகிஸ்தானை வெட்டிய அமெரிக்கா </strong></p>
<div>
<div>
<p>2009 இன் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடன் சமாந்தரமாக உறவைப் பேண வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கிய சிங்கள ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா எவ்வாறு இடமளித்ததோ, அதேபோன்றதொரு அந்தஸ்தை இந்தியாவைக் கடந்து பாகிஸ்தானுக்கும் அமெரிக்க வழங்கக்கூடிய வாய்ப்புண்டு. ஏற்கனவே பாகிஸ்தானைக் கூட்டாளி நாடென அமெரிக்க 2004 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.</p>
<p>சீனாவோடு நெருக்கம் அதிகரித்ததால் பாகிஸ்தானுடனான கூட்டாளி உறவை அமெரிக்கா பின்னர் துண்டித்துக்கொண்டது. ஆனாலும் அவ்வாறு துண்டிக்கப்பட்டமை குறித்து காங்கிரஸில் அமெரிக்கா இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.</p>
</div>
<div>ஆகவே எந்தநேரமும் முன்னெச்சரிக்கையோடு இந்தியா அமெரிக்கா சொல்வதைக் கேட்கக்கூடிய நட்பு ஒன்றைப் பேண வேண்டிய ஆரோக்கியமற்ற சூழல் இந்தியாவுக்கு உண்டு.</div>
</div>
<div></div>
<div></div>
<div><strong>குவாட் அமைப்பு</strong></div>
<div>
<div>
<p>குவாட் அமைப்பிற்குள் சேர்ந்து செயற்படுவதற்குரிய தகுதி இலங்கை இராணுவத்துக்கு இல்லை.</p>
<p>ஆனாலும் ஒத்துழைப்பது குறித்த இணக்கப்பாடுகளை அமெரிக்கா இலங்கையோடு பேசி வருகின்றது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="wp-image-10848 alignleft" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ar-1-300x171.jpg" alt="ar 1" width="582" height="332" title="அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் - அ.நிக்ஸன் 22" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ar-1-300x171.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ar-1.jpg 615w" sizes="(max-width: 582px) 100vw, 582px" /></p>
</div>
<div></div>
<div>ஆகவேதான் இலங்கையை முழுமையான கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலமே அமெரிக்கப் பிடியில் இருந்து விலகி இந்தியா சுயமாக இயங்க முடியுமென்பதைப் புதுடில்லி நன்கு அறியும்.</div>
<div></div>
<div>ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதைவிட ஈழத்தமிழர் பிரச்சினைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள்ளேயே தீர்த்துவிட இந்தியா முற்படுவது, புத்திசாலித்தனமல்ல.</div>
<div></div>
<div>இந்தியாவின் இந்தப் பலவீனங்களே இலங்கையில் சீனா நிலையாகக் கால் ஊன்ற வழி சமைத்ததுடன், அமெரிக்காவும் இந்தியாவைப் பயன்படுத்தத் துணிந்ததென்றும் கூறலாம். எனவே அக்கியூஸ் ஒப்பந்தம் இந்தியாவுக்குப் படிப்பினைகளைக்<wbr /> கொடுக்கும் காலமிது&#8230;</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/accus-agreement-and-new-delhi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
