<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமைச்சரவைப் பேச்சாளர் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:47:12 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>அமைச்சரவைப் பேச்சாளர் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்</title>
		<link>https://tamilnaadi.com/news/missing-people-in-the-diaspora-dallas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/missing-people-in-the-diaspora-dallas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 18:42:50 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[dallus Azhagaperuma]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[govenment]]></category>
		<category><![CDATA[missing people]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அமைச்சரவைப் பேச்சாளர்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.]]></category>
		<category><![CDATA[காணாமல் போனவர்கள்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[புலர்பெயர் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11441</guid>

					<description><![CDATA[காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ் இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர். இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய விடயமும் அல்ல. காணாமல் போனதாக கூறப்படும் பலர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்</h4>
<p>இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர்.</p>
<p>இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.</p>
<p>காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய விடயமும் அல்ல. காணாமல் போனதாக கூறப்படும் பலர் புலர்பெயர் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.</p>
<p>தமது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கும் பெற்றோர் கண்ணீர் விடும் காட்சிகளை நாம் காண்கிறோம். எனவே இவர்கள் இலங்கையின் பிரஜைகள். இவர்கள் தொடர்பில் நாம் பொறுப்புடன் செயற்படும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே சிறந்தது.</p>
<p>காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் திட்டவட்டமாக என்னால் கூற முடியாது. இதனைக் கண்டறியவே காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டு புலம்பெயர் இலங்கையர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து இது குறித்து பேச்சு நடத்தி தீர்மானங்களை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது &#8211; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/missing-people-in-the-diaspora-dallas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Aug 2021 17:43:41 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[covid death]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[அமைச்சரவைப் பேச்சாளர்]]></category>
		<category><![CDATA[ஹெகலிய ரம்புக்வெல]]></category>
		<guid isPermaLink="false">https://news.jeyit.solutions/?p=1894</guid>

					<description><![CDATA[நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு</h4>
<p>கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.</p>
<p>இன்று கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமை மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறுதல் ஆகியவை வைரஸ் பரவலுக்கு இடமளிக்கின்றன. இவை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் &#8211; என்றார்.</p>
<p>இதேவேளை, நாட்டில் தற்போதைய நிலைமை தொடர்ந்தால் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200 ஐ எட்டும்போது, நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் ஆகக் காணப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.</p>
<p>நாட்டில் கொரோனாத் தொற்று நிலைமை கட்டுமீறிச் சென்றுள்ள நிலையில், இன்றோ நாளையோ பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் நடத்தப்படும் கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் கூறப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
