வெள்ளைச் சீனிக்குத் மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையைத் தாண்டி, சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா...
பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. கொவிட் எதிரொலியால் சுமார் 2 வருடங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. அத்துடன், இணைய வழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,...
” சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...
‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் ‘பண்டோரா அக்கா’ என்றே அழைக்கின்றனர் – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன....
இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடை விதித்த ஆரம்பத்திலேயே, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாக அரசுக்கு எடுத்துக்கூறி இருந்தோம். எனினும், எமது கருத்துக்களை அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவே தற்போது பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது.’...
” எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” நாட்டின்...
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், இது விடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன. இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி ‘மக்கள்...
” பெருந்தோட்டத்துறைக்கு இரசாயன உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் மாத்திரமே அரசு ஒரு அடி பின்வாங்கும்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய...
” நாளை தேர்தலொன்று நடத்தப்பட்டால் நாம் தோல்வியடைவது உறுதி.” – என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச. பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய...
” இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன். மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று வடமேல் மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று அறிவித்தார். அதிபர் – ஆசிரியர்களின்...
இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. கொரோனாப் பரவல் காரணமாக, சிங்கப்பூர் அரசு கடந்த ஆறு மாத காலமாக இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த...
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது . மாணவர்களிடையேயான புத்தாக்க...
மேய்ச்சல் தரைகளும் விவசாய நிலங்களும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது. நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும்...
தமக்கு ஏற்ற ஆடைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேற்படி தெரிவித்துள்ளார். கொரோனாப் பரவல் காரணமாக நீண்ட காலம் அமுல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்துக்குப்...
கென்ட் என்ற போர் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை இன்று (24) வந்தடைந்துள்ளது. 133 மீற்றர் நீளமும், 16 மீற்றர் அகலமும் கொண்ட பிரித்தானியக் கடற்படைக்குச் சொந்தமான இப்போர்க் கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார்....
நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரமே நாளை தொடருந்துகளில் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை,...
பதுளை, பண்டாரவளையின் இருவேறுப் பகுதிகளில், இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றில் ஆணொருவரின் சடலம் கிடப்பதாக தகவல் வழங்கப்பட்டது. அதேபோன்று பண்டாரவளை- மீரியகஹ...
விசேட அதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன....