16 20
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

Share

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

ஜேர்மனியில் (Germany) கோமாரி நோய் (Foot-and-Mouth) கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா (Britain) தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் கோமாரி நோய் பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றி இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இந்த நோய் கண்டறியப்படாதாலும், தடுப்பு நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் இது நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோமாரி நோய் என்பது மாடுகள், பன்றிகள், ஆடுகள், மீன்கள் மற்றும் இரட்டைச் சொறி கால்களைக் கொண்ட கால்நடைகளில் மிக வேகமாக பரவும் வைரஸ் நோயாகும்.

இது மனிதர்களுக்கு எந்தவித சுகாதார அபாயத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 2001 இல் பிரித்தானியாவில் ஏற்பட்ட பெரும் பரவல் ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட கால்நடைகளை கொல்ல வழிவகுத்துடன் இது விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது, ஜேர்மனி பன்றி இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் சவால்களை சந்தித்து வருகின்றது. பிரித்தானியாவிற்கு ஜேர்மனி மூன்றாவது பெரிய பன்றிக் கறி ஏற்றுமதியாளராகவும் இரண்டாவது பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதியாளராகவும் உள்ள நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை, ஜேர்மனிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...