7 1 scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸ் கலவரங்களின்போது இளைஞரை சுட்ட பொலிசார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Share

பிரான்ஸ் கலவரங்களின்போது இளைஞரை சுட்ட பொலிசார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரான்சில் போக்குவரத்து பொலிசாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கலவர பூமியானது.

ஜூன் மாதம், 27ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், Nahel M. என்ற 17 வயது இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை வெடித்தது. அந்த இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அந்த கலவரங்களைத் தொடர்ந்து, Marseille நகரிலும் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தின்போது, Hedi (21) என்னும் இளைஞர், தன்னை பொலிசார் தாக்கியதாகவும், ரப்பர் குண்டு ஒன்றால் தான் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின்பும் தன் கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரைத் தாக்கிய நான்கு பொலிசார் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் Christophe (35) என்னும் பொலிசார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் சிறையிலடைக்கப்பட்டதற்கு பொலிஸ் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தன் கடமையைச் செய்யும்போது பெரிய தவறுகள் செய்தால் கூட, பொலிசாரை சிறையிலடைக்கக் கூடாது என தான் கருதுவதாகத் தெரிவித்திருந்தார் பிரான்ஸ் தேசிய பொலிஸ் துறைத் தலைவரான Frederic Veaux. அவரது கருத்துக்கு மற்ற பொலிஸ் துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், Christopheஐ சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணி Aix-en-Provence நகர நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், பொலிஸ் துறையினரின் ஆதரவையும் மீறி, Christopheஐ சிறையிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

CCTV காட்சிகள் Hedi தாக்கப்பட்டதை தெளிவாகக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள அரசு தரப்பு சட்டத்தரணி, Christopheஐ விடுவிப்பது வழக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, அவர் சிறையில்தான் இருக்கவேண்டும் என வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, Hedi தாக்கப்பட்ட விடயத்தில் Christopheஇன் பங்களிப்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தற்போது அவர் Hedi தாக்கப்பட்ட விடயத்தை பகுதியளவிற்கு ஏற்றுக்கொண்டாலும், முன்னர் அவர் அதை மறுத்தது, அவரது தரப்பு நியாயத்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கிவிட்டது என்றும் கூறி, அவரை விடுவிக்க மறுத்துவிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...