kamadenu 2023 09 732ef9ab a02c 458d 8830
உலகம்செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

Share

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மாரகெச் நகர் அதிகமாக பாதிக்கப்பட்டது.

வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

முதற்கட்டமாக 296 பேர் பலியானதாகவும், 153 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 672 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் துரித கதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரபாத் நகரில் 1,000 கூடாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...