24 66322b17eefc7
உலகம்செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்

Share

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்

செவ்வாய் கிரகத்தில் 45 நாட்களுக்கு நான்கு மனிதர்கள் வசிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட குழுவினர் 45 நாட்களுக்கு எல்லாவற்றையும் விட்டுச் சென்று செவ்வாய் கிரகத்தில் வாழ்வார்கள், ஆனால் இவர்கள் வாழவுள்ள செவ்வாய் வீடு பூமியில் தான் இருக்கும் என கூறப்பட்டள்ளது.

நான்கு தன்னார்வலர்களும் நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக் (Nasa’s Human Exploration Research Analog) பணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்றும் இவர்கள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில் (Nasa’s Johnson Space Center) செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் வாழ்விடத்தை தயாராக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நான்கு தன்னார்வலர்களில் ஜேசன் லீ (Jason Lee), ஸ்டீஃபனி நவரோ (Stephanie Navarro), ஷரீஃப் அல் ரொமைதி (Shareef Al Romaithi) மற்றும் பியுமி விஜேசேகர (Piyumi Wijesekara) ஆகியோர் அடங்குகின்றனர், அவர்கள் செவ்வாய் வாழ்விட பயணப் பணி மே மாதம் 10 -ம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 24 -ம் திகதி முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தலை விஞ்ஞானிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், நாசா விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளிப் பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, மனிதர்களை இதுபோன்ற வாழ்விடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

45 நாள் நீண்ட பயணத்தின் போது, ​​செவ்வாய் பரப்பினை ஆய்வு செய்வது, நடந்து பார்ப்பது போன்ற செயற்பாட்டு பணிகளை குழுவினர் மேற்கொள்வார்கள், அத்தோடு இதில் வேர்ச்சுவல் ரியாலிட்டியைப் (virtual reality) பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் “நடப்பதும்” அடங்குகின்றது.

இந்த ஆய்வுகள் ஒவ்வொரு குழுக்களாக முன்னெடுக்கப்படுகின்றது அந்தவகையில் இவர்களுக்கு முன்னர் இந்த ஆய்வினை நடத்த சென்ற குழுவினர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி அவர்களது ஆய்வுகளை நடத்தி முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...