1 scaled
உலகம்செய்திகள்

தொடர் கனமழை மற்றும் மின்னல்: 8 பேர் பரிதாபமாக மரணம்

Share

இந்திய மாநிலம் ஜார்கண்டில் பெய்துவரும் கனமழை மற்றும் மின்னல் தாக்குவதாலும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் சிறிய பாலங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்க வேண்டாம் எனவும், மரங்களின் அடியில் நிற்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ராஞ்சியின் லால்பூர் பகுதியில் நிரம்பி வழிந்த சாக்கடையில் விழுந்து பிரசாத் (எ) சோட்டு என்பவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரின் உடலானது இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டது.

மேலும், பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கடந்த 24 மணிநேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...