உலகம்செய்திகள்

சகோதரருடன் லண்டன் பூங்காவில் விளையாடிய சிறுவன்: கோர சம்பவம்

Share

சகோதரருடன் லண்டன் பூங்காவில் விளையாடிய சிறுவன்: கோர சம்பவம்

கிழக்கு லண்டன் பூங்காவில் சகோதரருடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த 4 வயது சிறுவனை XL Bully கொடூரமாக தாக்கியதில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 6.30 மணியளவில் நியூஹாம் பகுதியில் குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. 4 வயதேயான நெஹால் இஸ்லாம் தற்போது ஆழமான காயங்களுக்காக அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார்.

சம்பவத்தின் போது நெஹால் அவரது தந்தை மற்றும் சகோதரருடன் அந்த பூங்காவில் இருந்துள்ளார். நடந்தவற்றை நேரில் பார்த்த 11 வயது நபில் இஸ்லாம் தெரிவிக்கையில், சகோதரருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பூங்காவின் மூலையில் நாய்கள் கூட்டம் இருப்பதைக் கவனித்ததாகவும்,

அதில் இரண்டு சிறிய நாய்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் இருந்தன எனவும், ஆனால் மிகப் பெரிய ஒன்று சுதந்திரமாக ஓடுவதை பார்க்க முடிந்தது எனவும் நபில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும்
இந்த நிலையில் தான் அந்த பெரிய நாய் திடீரென்று தங்களை துரத்த தொடங்கியது எனவும், உண்மையில் அந்த நாய் என்னைப் போன்ற அளவில் இருந்தது எனவும் நபில் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

திடீரென்று நெஹாலை தாக்கிய அந்த நாய், காலை கவ்வி குதறியதாகவும் நபில் தெரிவித்துள்ளார். ஒருவழியாக தமது தந்தை அந்த நாயிடம் இருந்து நெஹாலை மீட்டதாக நபில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், அந்த நாயின் உரிமையாளரை அடையாளம் காண பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...