Connect with us

உலகம்

போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா

Published

on

6 36

சவூதி அரேபியாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உக்ரைனுடனான போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் நான்கு கொள்கைகளுக்கு உடன்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கொள்கைகளை ரூபியோ பின்வருமாறு விளக்கியிருந்தார்.

1. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள எங்கள் தூதரகங்களின் செயல்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, தற்போதைய பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இராஜதந்திர வசதிகள் காணப்பட வேண்டும்.

2. உக்ரைனுடனான மோதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும், பணியாற்றவும் எங்கள் தரப்பில் இருந்து ஒரு உயர்மட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம்.

3. உக்ரைனில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் விளைவாக ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு இரண்டையும் பற்றி விவாதிக்கவும் சிந்திக்கவும் தொடங்குவோம்.

4. உற்பத்தித் திறன் மிக்கதாக முன்னேற்றத்தை உறுதிசெய்ய தொடர்ந்து ஈடுபடுவோம்.” என மார்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையில் மார்கோ ரூபியோ , அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

உக்ரைனில் போர் முடிவுக்கு வந்தால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

பொது நலன் சார்ந்த பிரச்சினைகளில் புவிசார் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யர்களுடன் பங்காளியாக அமெரிக்காவிற்கு நம்பகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ரூபியோ கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல வருட பகைமைக்குப் பிறகு ஒரு “மிகப்பெரிய சாதனை” என்று ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவரும், சவுதி அரேபியாவின் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவின் ஒரு அங்கத்தவரான கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் முன்னேற்றம் சிறந்த அடித்தளத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 22.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள பரணி, கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 21 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 21.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 9 வெள்ளிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் அஸ்வினி, பரணி நட்சத்திரத்தை...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 20 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 20.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 8, வியாழக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம் ராசியில் ரேவதி,அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 19.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 7, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உத்திரட்டாதி, ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 18 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 18.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 6, செவ்வாய்க் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 16 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 16.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 3 ஞாயிற்று கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள சேர்ந்த அவிட்டம், சதயம்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 14 பிப்ரவரி 2025 இன்று காதலர் தினம் – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 14.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை...