உலகம்

ஐ.நா அமைதி காக்கும் படை மீதான அச்சுறுத்தல்: அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

Published

on

ஐ.நா அமைதி காக்கும் படை மீதான அச்சுறுத்தல்: அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் இஸ்ரேலால் தாக்கப்படுவது, அச்சுறுத்தலுக்கு உள்ளாவது உள்ளிட்ட ஆபத்துக்களில் சிக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளார்.

பெய்ரூட்டின் விமான நிலையத்திற்கான பாதைகள் தொடர்ந்து இயக்கப்படுவதைப் பார்க்க விரும்புவதாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தெளிவுபடுத்தியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

ஐ.நா அமைதி காக்கும் படைகள் எந்த வகையிலும் ஆபத்தில் சிக்குவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை எனவும், மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

லெபனானில் பாதுகாப்பை நிலைநாட்டுவதில்ஐ.நா அமைதி காக்கும் படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மில்லர் கூறியுள்ளார்.

Exit mobile version