21 1
உலகம்செய்திகள்

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் தீவிரம் பெறும் வலதுசாரிகளின் ஆதிக்கம்

Share

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் தீவிரம் பெறும் வலதுசாரிகளின் ஆதிக்கம்

ஜேர்மனியில் முதல் முறையாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தீவிர வலதுசாரி கட்சி ஒன்று மாகாணத் தேர்தலில் வெற்றியை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர் மக்களுக்கு ஜேர்மனியில் கடந்த 2013இல் உருவான AfD கட்சியே தற்போது மாகாணத் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளது.

புலம்பெயர் மக்களுக்கு எதிரான, ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சியாக இந்த AfD காணப்படுகிறது.

இந்நிலையில் AfD கட்சியால் ஆட்சியை கைப்பற்றுவது சுலபமல்ல என்றே அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும், பிரான்சில் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு ஏற்பட்ட அதே நிலை AfD கட்சிக்கும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, சாக்ஸனி(Saxony) மாகாணத்திலும் AfD கட்சி சிறந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தேசிய அளவில் முதன்மையான எதிர்க்கட்சியாக உள்ள CDU கட்சி சாக்ஸனி மாகாணத்தில் 32 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ள நிலையில் 31.5 சதவிகித வாக்குகளுடன் AfD கட்சி இரண்டாமிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாக்ஸனி (Saxony) மாகாணத்தில் வாக்களிக்க தகுதியான மக்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் என்றும் Thuringia மாகாணத்தில் 1.7 மில்லியன் பேர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் மற்றும் உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துவரும் BSW கட்சி இந்த இரண்டு மாகாணத்திலும் மூன்றாமிடத்தில் வந்துள்ளது.

தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. 2025 செப்டம்பர் மாதம் பெடரல் தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...

world 113
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலையில் சோகம்: சம்பூர் கடலில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

திருகோணமலை, சம்பூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ‘பவுல் பொயிண்ட்’ (Foul Point) என அழைக்கப்படும் சம்பூர் வெளிச்சவீட்டு...