உலகம்

பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு

Published

on

பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு

இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த கோர சம்பவம் நேற்று (3.7.2024) இந்தோனேசியா – தெற்கு சுலவேசியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண் தனது நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக அவர் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார்.

பெண் மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பாம்பின் அருகில் குறித்த பெண்ணின் செருப்பு அவரது கணவரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், 16 அடி தூரத்தில் வாயிலிருந்து கால்கள் வெளியே நீட்டிய நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

36 வயதுடைய சிரியாட்டி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version