Connect with us

உலகம்

வெளிநாட்டில் இஸ்ரேலிய தூதரகம் மீது பயங்கரவாத தாக்குதல்: துரிதமாக செயல்பட்ட பொலிசார்

Published

on

24 667f7cfe0ff26 29

செர்பியாவில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகம் மீது குறுக்கு வில் ஆயுததாரி ஒருவர் தாக்குதல் முன்னெடுத்த சம்பவத்தில் பொலிசார் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெல்கிரேடில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே குறித்த தாக்குதலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய தாக்குதலை செர்பியா மீதான பயங்கரவாத தாக்குதல் என்று அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் Ivica Dacic குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி உயிருக்கு போராடுவதாகவும், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்,

அருங்காட்சியகம் எங்கே என்று கேட்டு பலமுறை தன்னை அணுகிய ஒருவரால் காவலர் கழுத்தில் காயம்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பொலிசார் பதிலுக்கு பலமுறை துப்பாக்கியால் சுட்டதில், தொடர்புடைய ஆயுததாரி சம்பவயிடத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இது செர்பியா மீதான பயங்கரவாத தாக்குதல் என்றே தாம் நம்புவதாக அமைச்சர் Ivica Dacic குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அமைப்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு நம்புவதாகவும், ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெல்கிரேட் முழுமையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ல், கால்பந்து மைதானத்தைத் தாக்க சதி செய்ததற்காக சன்னி வஹாபி பிரிவைச் சேர்ந்த நான்கு ஆதரவாளர்களுக்கு செர்பியா சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

ஜோதிடம்

4 3 4 3
இலங்கை3 மணத்தியாலங்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத...

3 3
இலங்கை5 மணத்தியாலங்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்....

2 1 2 2 1 2
செய்திகள்5 மணத்தியாலங்கள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில் (India) பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் விருது வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

tamilni 1 tamilni 1
இலங்கை5 மணத்தியாலங்கள் ago

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

Rasi Palan new cmp 25 Rasi Palan new cmp 25
செய்திகள்8 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 2, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூன் 30, 2024 ஞாயிற்று கிழமை) இன்று சந்திரன் பகவான் மீனம், மேஷ ராசியில் ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று...

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 29, 2024, குரோதி...