உலகம்

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்

Published

on

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) இடையிலான போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கினால் அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உக்ரைனிடம் நிபந்தனைகளையோ கோரிக்கைகளையோ புட்டினால் முன்வைக்க முடியாது என்றும் அவரால் தொடங்கப்பட்ட போரை அவரே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version