உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

Published

on

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதறத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அமைதியாகிய நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உட்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version