உலகம்
ஈரானின் தாக்குதலில் பலியான உயிர்கள்!
ஈரானின் தாக்குதலில் பலியான உயிர்கள்!
ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளன எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நேரத்தில் விமானப்படை விமானங்கள் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கு வெளியே கப்பல் ஏவுகணைகளை இடைமறித்து வருகின்றன.
UAV களின் முதல் அலை இஸ்ரேலில் இருந்து வெகு தொலைவில் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது.
ஏவுகணைகளின் இரண்டாவது அலையால் இதுவரை அறியப்பட்டவற்றிலிருந்து முக்கியமான தளங்களில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும் ஜோர்டானில் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 வயது சிறுவன் ட்ரான் தாக்குதலால் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளான்.