உலகம்

இந்தியாவுக்கு பேரிடி: சீனா தீட்டியுள்ள திட்டம்

Published

on

இந்தியாவுக்கு பேரிடி: சீனா தீட்டியுள்ள திட்டம்

இந்தியாவின் அருணாசல பிரதேச(arunachal pradesh) எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கிராமங்கள் கண்காணிப்பு மையங்களாகவும் இராணுவ தளங்களாகவும் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசியாவில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக மாறுவதற்கு சீனா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும் அதற்கு தடையாக இந்தியா இருந்து வருகின்றமையால் இந்தியாவுடன் சீனா மோதல் நிலையை கடைபிடித்து வருகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தையும் தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, அவ்வப்போது எல்லைகளை மீறி அத்துமீறியுள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், தற்போது, அருணாசல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் 175 கிராமங்களை சீனா அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version