உலகம்

தென் லண்டன் ரயிலில் பயங்கரம்! 19 வயது இளைஞர் கைது

Published

on

தென் லண்டன் ரயிலில் பயங்கரம்! 19 வயது இளைஞர் கைது

தெற்கு லண்டனில் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு பிறகு 19 வயது இளைஞர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் லண்டனில் ரயிலில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 19 வயதான இளைஞர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Beckenham ஜங்ஷன் மற்றும் Shortlands நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் 20 வயதுக்குட்பட்ட ஒருவர் படுகாயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் (British Transport Police – BTP) மற்றும் மருத்துவக் குழுவினர்

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை நாங்கள் அறிவோம்” என்று BTPயின் கண்காணிப்பாளர் திரு. டாரென் மால்பாஸ் கூறினார். “சம்பவம் குறித்து எங்கள் துப்பறியுபவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.”

அத்துடன் பொலிஸாரின் தகவலில், ரகீம் தாமஸ் ஏப்ரல் 30 ஆம் திகதி விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version