உலகம்

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

Published

on

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கீவ் மீது பழிசுமத்த புடின் முயல்வதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் 4 துப்பாக்கி ஏந்திய நபர்கள் உக்ரைன் நோக்கிப் பயணம் செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா சண்டையிட்டு வரும் நிலையில் புடின் இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில் புடினின் கூற்றை நிராகரித்து, அவர் மீது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”நேற்று மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது: புடினும் மற்றவர்களும் வேறு யாரோ ஒருவர் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒரே முறைகளைக் கொண்டுள்ளனர்.

புடின் தனது ரஷ்ய குடிமக்களுடன் பழகுவதற்கு பதிலாக, அவர்களிடம் உரையாற்றுவதற்கு பதிலாக, ஒரு நாள் அமைதியாக இருந்தார். அதை உக்ரைனுக்கு எவ்வாறு கொண்டு வருவது என்று யோசித்தார். எல்லாம் முற்றிலும் கணிக்கக்கூடியது” என தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதல், ரஷ்யாவில் ஏறக்குறைய 2 தசாப்தங்களாக நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் ஐ.எஸ் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version