உலகம்

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குடியிருப்பில் சடலமாக மீட்பு: பிரித்தானியாவில் சம்பவம்

Published

on

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குடியிருப்பில் சடலமாக மீட்பு: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில், பாடசாலையில் விளையாடிவிட்டு குடியிருப்புக்கு திரும்பிய 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி தொடர்பில் கைதான பெண்மணி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Rowley Regis பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து 10 வயதேயான Shay Kang நேற்று குற்றுயிராக மீட்கப்பட்டார்.

மருத்துவ உதவிக் குழுவினர் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுத்த நிலையிலும், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் சிறுமிக்கு நன்கு அறிமுகமான 33 வயது பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி Shay Kang குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள பிரிக்ஹவுஸ் ஆரம்ப பள்ளியில் பயின்று வந்துள்ளார். இன்று சிறுமியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் அப்பகுதி மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version