உலகம்

விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன்! அதிர வைத்த காரணம்

Published

on

விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன்! அதிர வைத்த காரணம்

மது வாங்க பணம் தராததால் 71 வயது தாயை அவரது மகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் காசம்மாள் (71).

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அருகேயுள்ள ஆனையூரைச் சேர்ந்த இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் நமகோடி மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நமகோடி தனது பெற்றோருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி மது வாங்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம், தூங்கிக்கொண்டிருந்த தாயை எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவருக்கு காசம்மாள் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, நமகோடி ஆத்திரத்தில் கட்டை ஒன்றால் தாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காசம்மாள், அங்கேயே கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காசம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மகன் நமகோடியையும் பொலிஸார் கைது செய்தனர்.

 

Exit mobile version