இலங்கை
வெளிநாட்டு வீதியொன்றுக்கு இனப்படுகொலையாளி மகிந்தவின் பெயர்
வெளிநாட்டு வீதியொன்றுக்கு இனப்படுகொலையாளி மகிந்தவின் பெயர்
பாலஸ்தீன நாட்டின் ஒரு வீதிக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் நாடுகளுடன் இணைந்தே அன்று மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களை கொன்று குவித்திருந்தார் என்ற கருத்துக்கள் இலங்கையின் ஒரு சில தரப்புக்களால் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், அப்படியான ஒருவரின் பெயரை எதற்காக ஒரு விடுதலைப் போராட்ட மண்ணின் வீதிக்கு சூட்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்திருக்க கூடும்.
இவ்வாறு இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாடுகளை உற்று நோக்கினால் அது ஈழத்தமிழர் – இலங்கை அரசுக்கிடையிலான போர் நகர்வுகளை எடுத்துரைக்கும்.