உலகம்

கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

Published

on

கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்று கார் மற்றும் டிராக்டர் மீது மோதிய விபத்தில், 6 பேர் உடல்நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அதிகாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

2.30 மணியளவில் கல்யாண் சாலையில் கரும்பு ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்தது.

இதனால் மற்றொரு டிராக்டர் கொண்டு வரப்பட்டு அதிலிருந்த கரும்புகள் அந்த வாகனத்திற்கு மாற்றப்பட்டது.

அச்சமயம் காரில் வந்த நபர் கரும்புகளை இறக்கும் பணிக்கு உதவியுள்ளார். அப்போது டிராக்டர் திரும்பியபோது அரசு பேருந்து அதன் மீதும், கார் மீதும் மோதி பயங்கர விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவர்கள் உதவினர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், ‘டிராக்டர் சாலையில் திரும்பியபோது, அங்கு வந்த அரசுப் போக்குவரத்து பேருந்து டிராக்டர் மற்றும் கார் மீது மோதியது. சில தொழிலாளர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்’ என தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version