உலகம்

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கலாம்… ஜேர்மனி அச்சம்: கசிந்த ஆவணங்கள்

Published

on

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கக்கூடும் என்ற அச்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், ரஷ்யா அடுத்த ஆண்டு நேட்டோ கூட்டணி நாடுகள் மீது தாக்குதலை விரிவாக்கலாம் என்றும், அதனால், மூன்றாம் உலகப்போர் துவங்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் ஜேர்மனி கருதுவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் செய்தித்தாளான Bild செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் நேட்டோ மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், பிரச்சினை விரைவில் பெரிதாகலாம் என்றும், ஆகவே, பல்லாயிரக்கணக்கான ஜேர்மன் வீரர்கள் போர்க்களத்துக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே 31 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் நேட்டோ போர்ப்பயிற்சி ஒன்றிற்காக பிரித்தானியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை தயாராக்கிவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version