உலகம்

இந்தியாவின் அண்டை நாட்டின்மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஈரான்: இரண்டு குழந்தைகள் பலி

Published

on

ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஈரான் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரான் தரப்போ, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளிக்குழுவான Jaish al-Dhulm என்னும் அமைப்பின் தளங்களை அழிப்பதற்காகவே தாங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளித்துள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அவ்வப்போது தனது எல்லையோரமாக இருக்கும் போராளிகளுடன் சண்டையில் ஈடுபடுவது உண்டு என்றாலும், அது பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version