உலகம்

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே: சீனா ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தல்

Published

on

தாய்வான் புதிய ஜனாதிபதியாக லாய் சிங் தே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தாய்வானில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இத் தேர்தலில் அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லாய் சிங் தே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியை சேர்ந்த ஹவ் யொ-ஹி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

வாக்குப்பதிவு இன்று (13.1.2023) மாலை 4 மணிக்கு நிறைவடைந்த நிலையில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது

இதையடுத்து, லாய் சிங் தே தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தாய்வான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கிகரிக்கவில்லை.

மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சீனா கூறி வருகிறது.

தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version