உலகம்

ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம் : இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்

Published

on

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புது டெல்லி உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கைபர் பக்துன்க்வா நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

3 மாத இடைவெளியில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version