உலகம்

சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலில் சிக்கிய 15 இந்திய பணியாளர்கள்., காலத்தில் இறங்கிய INS Chennai

Published

on

சோமாலியா கடற்பகுதியில் அரபிக்கடலில் மற்றொரு கப்பல் கடத்தப்பட்டது. கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர்.
சம்பவம் நேற்று (ஜனவரி 4) நடந்தது. ஆனால் அதன் தகவல் இன்று வெளிச்சத்திற்கு வந்தது. லைபீரிய கொடி ஏற்றப்பட்ட இந்த கடத்தப்பட்ட கப்பலின் பெயர் லீலா நோர்ஃபோக் (MV Lila Norfolk).
கப்பல் பிரித்தானியாவின் UKMTO (United Kingdom Maritime Trade Operations) போர்ட்டலுக்கு செய்தி அனுப்பியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி 4-ஆம் திகதி மாலை சுமார் 5-6 பேர் ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கியதாகக் கூறப்பட்டது.
இது குறித்து இந்திய கடற்படை கூறியதாவது., “இந்த விடயத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். வணிகக் கப்பலைப் பாதுகாக்க அதனை நோக்கி இந்திய கடற்படையினர் INS Chennai கப்பலை அனுப்பியுள்ளனர்.”
MV Lila Norfolk கப்பல் பிரேசிலில் உள்ள போர்டோ டோ அசுவில் இருந்து Bahrainல் உள்ள கலீஃபா பின் சல்மான் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்ததாக MarineTrafic தெரிவித்துள்ளது. இது ஜனவரி 11-ஆம் திகதி பஹ்ரைனை அடைய திட்டமிடப்பட்டது.
ஐஎன்எஸ் சென்னையை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்திய கடற்படை விமானம், கடத்தல் பற்றிய தகவல் கிடைத்ததும், கப்பலை நோக்கி கடல்சார் ரோந்து விமானம் P8I அனுப்பப்பட்டது.
விமானம் அதிகாலையில் கப்பலின் இருப்பிடத்தை அடைந்து பணியாளர்களை தொடர்பு கொண்டது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேநேரம் ஐஎன்எஸ் சென்னை இருக்கும் இடத்தை கடற்படை விமானங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
Exit mobile version