உலகம்

ஹமாஸ் மூத்த தலைவரை கொன்ற இஸ்ரேல்., Jordan, Lebanon நாடுகளில் வெடித்த ஆர்ப்பாட்டம்

Published

on

ஹமாஸ் தலைவர் சலே அல் அரூரி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து லெபனானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Jordan, Lebanon உள்ளிட்ட பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக பலத்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, ஆய்வாளர்கள் இப்போது மேற்கு ஆசியா முழுவதும் மோதல் அச்சத்தில் உள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

லெபனானுக்குள் ஆளில்லா விமானம் மூலம் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் சலே அல் அரூரியை (Senior Hamas leader Saleh al-Arouri) இஸ்ரேல் ராணுவம் கொன்றது.

உலகின் மூலை முடுக்கெல்லாம் பதுங்கியிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்த பிறகுதான் போரை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அரசு முன்பு கூறியது.

இது மட்டுமின்றி, இஸ்ரேல் தனது உளவு நிறுவனமான Mozartடையும் முதன்முறையாக உலகம் முழுவதும் நிலைநிறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சலேயின் கொலைக்குப் பிறகு, ஜோர்டானில் இருந்து லெபனான் வரை வலுவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தற்போது வளைகுடா முழுவதும் காஸா போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹமாஸ் தலைவரைக் கொல்வதற்கு முன் இஸ்ரேல் தங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் கூறியுள்ளது. தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்காவுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் துணைத் தலைவராக சலே இருந்தார். இந்தக் கொலைக்குப் பிறகு, பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக ஹமாஸ் கூறியுள்ளது.

காசா போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் சலே. இதனிடையே பெய்ரூட்டில் நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Exit mobile version