உலகம்

ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய பிரபல நடிகர்.. காத்திருந்த அதிர்ச்சி

Published

on

ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ட்வீட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன, சாலைகளில் விரிசல் விட்டன. மேலும் ஒரு மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக சுனாமி அலைகள் தாக்கின.

குறிப்பாக வஜிமா துறைமுகம் பெரும் பாதிப்பை சந்தித்தது. புத்தாண்டு தொடக்கத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஜப்பான் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இதுகுறித்து ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் எங்களுக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன்.

பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். ஜப்பான் மக்கள் இந்த நேரத்தில் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version