உலகம்

பாழடைந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

Published

on

பெங்களுருவில் பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் சித்ரதுர்கா டவுன் பகுதியில் சில ஆண்டுகளாக மூடிக் கிடந்த பாழடைந்த வீட்டில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் வாசலில் மனிதர் ஒருவரின் மண்டை ஓடு கிடப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்ட பொலிஸார், பூட்டி கிடந்த வீட்டில் இருந்து 5 பேரின் எலும்புக் கூடுகளை கண்டுபிடித்தனர்.

உயிரிழந்த 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2019ம் ஆண்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் கொள்ளை வழக்கில் தண்டிக்கப்பட்டதால் குடும்பத்தோடு இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version