உலகம்

அமெரிக்க இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம்

Published

on

அமெரிக்க இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோயில் சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக நெவார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

“கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க நெவார்க் பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம்,”என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் “X”தளத்தில் தெரிவித்துள்ளது.

Exit mobile version