உலகம்

ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி

Published

on

ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி

லண்டனில் இருந்து செயல்படும் ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊடகவியலாளர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிரியா ஆதரவு ஈரானிய உளவாளிகள் இந்த விவகாரம் தொடர்பில் ஒருவருக்கு 200,000 டொலர் வரையில் அளிக்கவும் முன்வந்துள்ளனர் என கூறப்படுகிறது. அந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் தாங்கள் குறிவைக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

திருமணம் என ரகசிய குறியீடு அளிக்கப்பட்டு ஈரானிய ஊடகவியலாளர்களான Farhad Farahzad மற்றும் Sima Sabet ஆகிய இருவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஈரானின் IRGC எனப்படும் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரியான Muhammed Abd al-Razek Kanafani என்பவரே, படுகொலைக்கு உத்தரவிட்டுள்ளார். இவர் சிரியா ஜனாதிபதி அல்-அசாத்துக்கு நெருக்கமானவர் என்றே கூறப்படுகிறது.

ஆனால் கடந்த இலையுதிர்காலத்தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் ஐடிவி செய்தி நிறுவனத்திற்கு திட்டங்களை வெளிப்படுத்த பணம் வழங்கிய நிலையில் இந்த திகிலூட்டும் சதி அம்பலமானது.

ஈரானிய செய்தி ஊடக நிறுவனத்திற்கு வெளியே கார் வெடிகுண்டு பதுக்கி வைக்க வேண்டும் என்று அந்த நபரிடம் ஈரானிய உளவாளிகள் இருவர் கூறியதாகவும், ஆனால், அந்த திட்டத்தை மாற்றிவிட்டு, அவர்களின் குடியிருப்புக்கே சென்று கத்தியால் தாக்கும்படி கூறியுள்ளனர்.

இந்த நிலையில், படுகொலை திட்டம் அம்பலமானதை அடுத்து, Sima Sabet தெரிவிக்கையில், நான் எனது வேலையை சரிவர செய்து வருகிறேன் என்பதற்கு இதுவே சான்று என்றார்.

Exit mobile version