உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தை: கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்

Published

on

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தை: கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் கெய்ரோ சென்றுள்ளார்.

இஸ்ரேலுடனான காஸா போரில், போர் நிறுத்தம் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கத்தாரைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு சென்றுள்ளார்.

காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலின் முன்னேற்றங்கள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து எகிப்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ஹனியே எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்கு வந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கெய்ரோவுக்கு வருவதற்கு முன்பு, ஹனியே Iran வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை தோஹாவில் சந்தித்தார், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஹனியே எகிப்துக்கு உயர்மட்ட ஹமாஸ் தூதுக்குழுவை வழிநடத்துவார், அங்கு அவர் எகிப்திய உளவுத்துறை தலைவர் அப்பாஸ் கமால் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஹமாஸ் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

காஸா பகுதியில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

காஸாவில் ஹமாஸுடன் இணைந்து போராடும் இஸ்லாமிய ஜிஹாத் குழுவும் பேச்சுவார்த்தைக்காக அடுத்த வார தொடக்கத்தில் கெய்ரோவுக்கு வரும் என்று குழுவின் தலைவர் ஜியாத் நக்லே அறிவித்தார்.

கடந்த மாதம், எகிப்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் கத்தார் மத்தியஸ்தம் செய்த ஒரு வார கால போர் நிறுத்தத்தில் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக 80 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கப்பட்டனர்.

Exit mobile version