உலகம்
சுவிஸ் நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
சுவிஸ் நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
சுவிஸ் நகரமொன்றில் திடீரென ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.
சுவிஸ் நகரமான Sionஇல், இன்று காலை 8.00 மணியளவில், திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியானார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.
அந்த நபர் சரமாரியாக சுட்டதாகவும், சுடப்பட்டவர்கள் அவருக்கு அறிமுகமானவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். எதற்காக அவர் திடீரென்று அவர்களை சுட்டார் என்பது தெரியவில்லை.
கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் அந்த நபரைத் தேடிவருகிறார்கள்.