உலகம்
வெடித்து சிதறியது எட்னா எரிமலை
வெடித்து சிதறியது எட்னா எரிமலை
இத்தாலியின் சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஐரோப்பாவின் மிக உயர்ந்த செயலில் உள்ள எரிமலையான மவுண்ட் எட்னா வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது.
இந்த எரிமலை வெடித்துச் சிதறியதால் இதுவரை ஆபத்தான சூழ்நிலை உருவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காடானியாவில் உள்ள இத்தாலிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் (INGV) படி, எரிமலை நீரூற்றுகள் வெள்ளிக்கிழமை மாலை கடல் மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்திற்கு பாய்ந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த எட்னா எரிமலை தொடர்ந்து செயலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.