இலங்கை

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் மாவீரர் நாள்

Published

on

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் மாவீரர் நாள்

பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் வழமைக்கு மாறாக கடும் குளிர் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version