உலகம்

இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதம்..இதுதான் ஒரே வழி – ஜோ பைடன்

Published

on

இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதம்..இதுதான் ஒரே வழி – ஜோ பைடன்

இரு நாடு தீர்வு என்பதே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் என இருவருக்கும், நீண்டகால பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்குவதற்கு ஒரே வழியாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரின் இடையே நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.

மூன்றாவது நாளில் 17 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதேபோல் இஸ்ரேல் 39 பாலஸ்தீன மக்களை விடுவித்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் என இருவருக்கும் நீண்டகால பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்குவதற்கு இரு நாடு தீர்வே ஒரே வழியாக இருக்கும்.

இருதரப்பு மக்களும், சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை சம அளவில் பெற்று வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பணியை நாங்கள் கைவிடமாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

Exit mobile version