உலகம்

கராச்சி வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 பேர் பலி

Published

on

கராச்சி வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version