இலங்கை

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்

Published

on

இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் இலங்கைக்கு வருகை தர உள்ளது.

குறித்த கப்பல் நாளை (12.11.2023) இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் உல்லாச பயண துறையை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இலங்கைக்கு இந்த கப்பல் வருகைதரவுள்ளது.

மேலும் தெரிய வருகையில், குறித்த கப்பல், எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உல்லாச பயண துறையில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான YARA GLOBAL (pvt Ltd) நிறுவனத் தலைவர் H.M.Riyaldeen இந்தக் கப்பலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கப்பலில் வரும் உல்லாச பயணிகளை இலங்கையின் சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலும் உல்லாச பயணிகளோடு மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவருகிறது.

Exit mobile version