உலகம்

அண்ணாமலையை நேரில் பார்க்கல.. தமிழ்நாட்டை சீர்குலைக்கிறார்! மன்சூர் அலிகான் ஆவேசம்

Published

on

அண்ணாமலையை நேரில் பார்க்கல.. தமிழ்நாட்டை சீர்குலைக்கிறார்! மன்சூர் அலிகான் ஆவேசம்

தமிழ்நாட்டை சீர்குலைத்து மதவெறிக்காடாக மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார் என நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்த்ததில்லை. அவர் ஐபிஎஸ் படித்திருக்கிறார். அவருடைய அரசியல் எப்படி இருக்கும் என்றால், அண்ணாமலை களத்தூரில் தங்கியிருக்கும் போது வீட்டின் முன்பு கம்பம் நடுகிறார்கள்.

அதுவும், எந்தவித அனுமதியும் வாங்காமல் கம்பம் நடுகிறார்கள். நான் பார்த்ததை வைத்து தான் சொல்கிறேன். ஏன் அவர்கள் அதை அப்படி செய்கிறார்கள். கலவரம் பண்ண வேண்டும் என்றும், குதர்க்கம் பண்ண வேண்டும் என்றும் செய்கிறார்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், “மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தை சீர்குலைத்து மதவெறிக்காடாக மாற்ற அண்ணாமலை செயல்படுகிறார்.

குஜராத்திலும், புல்வாமாவிலும் எப்படி செய்தார்களோ ஆளுநர் மாளிகையிலும் அப்படி செய்கிறார்கள். இவர்களே ரவுடியை வெளியே கொண்டு வந்து வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றிவிட்டு அப்படி வைக்கிறார்கள்” என்றார்.

Exit mobile version