உலகம்

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர் குடியேற்றவாசிகள்

Published

on

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர் குடியேற்றவாசிகள்

கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்கு பெருமளவில் புலம்பெயர்ந்து செல்லத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார நிலை, இனவாத பிரச்சனைகள், வீட்டு உரிமை, வேறு நாடுகளில் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற காரணங்களாலேயே அவர்கள் கனடாவை விட்டு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய குடியுரிமை நிறுவகம் மற்றும் கனடிய பேரவை ஆகியன நடத்திய ஆய்வில் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கனடாவை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்த குடியேறிகளின் எண்ணிக்கை 31 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தேசிய சராசரி எண்ணிக்கையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாட்டவர்கள் வேறு நாடுகளை நோக்கி குடிப்பெயரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version